Step into an infinite world of stories
Biographies
பயணங்கள் எப்போதுமே இனிமையானவை. உற்சாகம் தருபவை. அதுவும் ஆன்மிகம் சார்ந்தவையாக இருப்பின் அதன் சிறப்பே அலாதியானது.
இதற்கு முன்பே என்னுடைய திருத்தலப் பயணங்கள் பற்றிய கட்டுரைகளை நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்தாவதாக மலரும் 'யாதுமாகி நின்றாள்!' என்னும் இத்தொகுதி வெளிவருகிறது.
தமிழகம், ஆந்திரம், இன்றைய தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், தவிர மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.
வழக்கம்போல் இந்த நூலையும் வாசக அன்பர்கள் வரவேற்று மகிழ வேண்டும். இந்தக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்ட கல்கி, அமுதசுரபி, தீபம், தினமணி, கோபுர தரிசனம், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர்களுக்கு என் நன்றி.
அழகுற ஒளியச்சுச் செய்துள்ள நாஞ்சில் பெ. மணிக்கும் மேலட்டையை வடிவமைத்துள்ள ஓவியர் ஹரீஷ்குகனுக்கும் என் நன்றி.
அன்பன்.
சுப்ர. பாலன்
Release date
Ebook: 18 December 2019
English
India