ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
பிரபல எழுத்தாளர்களின் வரிசையில் என்னையும் ஒருவனாய் வைத்திருக்கும் எனது வாசகக் கண்மணிகளுக்கு வணக்கம்.
காதல் கலந்து இனிக்க இனிக்க எழுதப்பட்ட விறு விறுப்பான குடும்பக் கதையான இத்தொடரில் வருகிற மதுமிதாவையும், சூர்யாவையும், ரமணனையும், உங்களால் மறக்கவே முடியாது.
ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இக்கதையில் வரும் ரமணன். எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சூர்யா.
அதே மாதிரி ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் மதுமிதா. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அனுப்பிரியா.
இத்தொடரை வாசித்துவிட்டு ஏகப்பட்ட பேர் என்னிடம் தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும், நேரிடையாகவும் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தார்கள். மிகப்பெரிய வெற்றித் தொடராக அமைந்த இக்கதையை தேவியில் எழுதும் அருமையான வாய்ப்பை எனக்களித்த தேவி வார இதழின் ஆசிரியர் உயர்திரு. ஐயா அவர்களுக்கும், இத்தொடரை தற்போது புத்தகமாக உங்களது கைகளில் தந்து கண்களுக்கு விருந்து படைத்திருக்கும் எனது வணக்கத்திற்குரிய அறிவு நிலையம் பதிப்பகத்தினர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல கோடி.
மீண்டும் சந்திப்போம்.
மகேஷ்வரன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 กุมภาพันธ์ 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย