ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
“ஒரு பட்டாம்பூச்சியின் காதல் “என்ற இந்த குறுநாவல் தொகுதியில் இருக்கக்கூடிய ஆறு கதைகளுமே காதல் அகராதிக்கு பொருள் சொல்லும் கருத்து நிரம்பிய காதல் கதைகள்.
காதலில் பல வகை உண்டு. உண்மைக்காதல், சொத்துக்கள் மீது ஆசை கொண்ட காதல், சொந்த காதல் இடம் மாறும் காதல், கட்டாய காதல், கரை மீறும் காதல்
இத்தனை காதல்களும் நம்மிடையே வித விதமான உருவங்களில் அன்றாடம் வந்து கொண்டுதானிருக்கின்றன.
காதல் ஒரு பரிசுத்த உணர்வு. அதை சரியாக புரிந்து கொண்டால் அது தெய்வீகமானது.
“காதல் போயின் சாதல்” என்றார் பாரதி. நம்மிடையே இருக்கக்கூடிய வக்கிரங்கள் ஒழிந்தால் காதல் என்றும் பரிசுத்தமாக இருக்கும். காதலிலே துரோகம், வஞ்சம், பழிவாங்கும் உணர்வு போன்ற பல உணர்வுகளை இருப்பதை இந்தத் தொகுதி கூறுகிறது.
ஆனால் முடிவு ஒன்றுதான்.
என்றுமே ஒரு தண்டனை காத்திருக்கிறது.
நீதி சாவதில்லை
தெய்வம் நின்று கொல்லும்
இதுதான் ஒரே முடிவு. அந்த முடிவுதான் ஆண்டவன் தரும் முடிவு
அந்த முடிவு நமக்கு ஆரம்பத்திலேயே தெரியாவிட்டாலும் முடிவிலே நமக்கு தெரியும்.
இதைச் சொல்லும் கதைதான் இந்த “பட்டாம்பூச்சியின் காதல்”
ஒவ்வொரு கதையிலும் ஒரு பாடம் உங்களுக்குக் கிடைக்கும்.
பாடத்தை சரியாக புரிந்து கொண்டால் கதையை சரியாக புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..படியுங்கள்
วันเปิดตัว
อีบุ๊ก: 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย