ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
விளையாட்டாய் முகநூலில் எழுத ஆரம்பித்தபோது... வெட்டியாய் அதில் நேரம் கழிக்கிறேன் என்று சிறு உறுத்தல் இருந்தது. என் நலம் விரும்பிகள் பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.
என் பதிவுகள் (எதனால் என்றே தெரியவில்லை!!) பலருக்கும் பிடித்துப்போயின. லைக்குகள் ஷேர்கள் என்று வரவர ஒருவித நாட்டம் அதிகமாயிற்று.
சில சமயங்களில் வேலைகள் தடைப்பட்டதாலும்... இரவுகளில் கண்விழித்து முகநூலில் செலவழிப்பதாக உறுத்தல் ஏற்பட்டதாலும்... அடிக்கடி deactivate செய்ய ஆரம்பித்தேன்.
அது பலருக்கு மிகுந்த வருத்தமளித்தது.
ஒரு சமயத்தில் நம் புஸ்தகா டாட்காமில் என் நூல்கள் தொடர்ந்த வெளியாகும்போது அது தந்த உந்துதல்+ உற்சாகம்+ ஊக்குவிப்பு காரணமாக என் பதிவுகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை நூலாகத் தொகுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்...
மிகுந்த ஆர்வத்துடன் யெஸ் சொன்னார் புஸ்தகா நிறுவன ராஜேஷ் தேவதாஸ்.
அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
நீங்கள் முகநூலில் இருக்கிறீர்கள் என்றால் இது பற்றிய விமர்சனத்தை அங்கே எழுதலாம்.
எனக்கே எழுத நினைத்தீர்கள் என்றால் vedhagopalan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கும் எழுதலாம்.
மீண்டும் ராஜேஷ்ஜிக்கு நன்றி சொல்லி, நூல் தொகுப்புக்குள் உங்களை வரவேற்கும்
வேதா கோபாலன்
วันเปิดตัว
อีบุ๊ก: 17 พฤษภาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย