นิยาย
எனது நினைவுகளை நான் எழுத வேண்டும் என்று என் நண்பர்கள் பல காலமாக என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஜப்பானில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களில் மூத்தவன் என்ற முறையிலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் அந்தப் போர் சம்பந்தமாக என்ன நடந்தது என்பதை அந்நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவன், நேரில் பார்த்தவன் என்ற முறையிலும் அவற்றை எழுத்தில் வடித்து வைப்பது பின்னால் வருகிறவர்கள் உண்மை நிலையை உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த நூலை நான் எழுதியதே ஒரு விபத்தினால்தான். அதுவும் உண்மையான விபத்து. இதுவரை பல புத்தகங்களில் வாசகர்கள் படித்திருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத வகையில் விலகிப்போய் இந்தப் புத்தகம் பல சம்பவங்களை விசாரிக்கிறது. எனது கணிப்புகளைப் படித்துவிட்டுப் பலர் புருவங்களை உயர்த்தக் கூடும். பாரபட்சமான அரசியல் விளம்பரங்களையும், பிரசாரங்களையும் நம்பிப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 11 ธันวาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
