ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ศาสนา&จิตวิญญาณ
தமிழகம் அறிந்த சிறந்த எழுத்தாளர், 400 சிறுகதைகள், ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகள், ஆலய தரிசனம் ஆகியவற்றைப் பல இதழ்களில் எழுதியவர், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் இலாகாவின் செயல் அலுவலராகவும், விகடன் சேர்மன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர், திரு.ஜே.வி.நாதன். அவர் எழுதியுள்ள இந்த நூலில் தமிழகம் தாண்டி அமைந்துள்ள சிறப்பான 50 ஆலயங்களின் தரிசனம், தல வரலாறு, ஆலயச் சிறப்புகள், ஆலயம் மற்றும் இறைத் திருவுருவங்களின் புகைப்படங்கள் ஆகியவை கட்டுரைகளுக்குக் கனம் சேர்க்கின்றன.
சக்தி விகடன், இந்து தமிழ் திசை, குமுதம் பக்தி ஸ்பெஷல், கல்கி குழும ஆன்மிக இதழான தீபம், ஜன்னல் மாதமிருமுறை எனப் பல இதழ்களில் எழுத்தாளர் ஜே.வி.நாதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் சிறப்பாகப் பக்தர்கள் வழிபடக்கூடிய புகழ்பெற்ற கோயில்களைத் தரிசிக்க, இந்த நூலின் ஆசிரியர் நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார்.
தமிழகத்தைத் தாண்டி சிறப்பாக விளங்கும் பிற மாநில ஆலயங்களுக்குச் சென்று வழிபட, ஆன்மிக அன்பர்களுக்கு இந்த நூல் ஓர் பொக்கிஷ வழிகாட்டியாக உதவும் என்பதில் ஐயமில்லை.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 26 มีนาคม 2567
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย