நான் என்னிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன். அசாதாரண சூழலில் என் தனிமை எப்போதும் போலில்லாமல் மிகப் பெரியதாய் விரிந்து என்னையே பயத்தில் வீழ்த்தி மரணத்தின் வாசனையை நுகரச் செய்தது.
மொட்டை மாடியில் தூக்கம் பிடிக்காத இரவுகளில் நிலவுடனும் நட்சத்திரங்களுடனும் காதலியின் நினைவுகளுடனும் உரையாடிக் கொண்டிருந்தேன். இந்த விபரீத விநோத கணங்களில் உறைந்திருந்த அமைதிக்குள்ளிருந்து அவ்வப்போது பறவைகள் தருக்களின்மீது அமர்ந்து காற்றின் கீதங்களைப்போல இசைத்திருந்தன. இரவென்றாலே நட்சத்திரம், நிலா, சில பொழுதுகளில் தூறல் இவற்றினிடையே கவிதைகளை எழுதிய வண்ணமிருந்தேன். அப்படித்தான் இந்தத் தொகுப்பு உருவானது. இதோ நீங்களும் பள்ளத்தாக்கின் ஆழ்ந்த மௌனத்திலிருந்து...
วันเปิดตัว
อีบุ๊ก: 7 กรกฎาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา