Step into an infinite world of stories
Classics
பாரதியார் கவிதைகளை - அவரது எழுத்துக்களை ஆய்ந்து, அனுபவித்து தமிழ்த்தாய் பார்வையில், பாரதமாதா பார்வையில், பராசக்தி பார்வையில், பாஞ்சாலி பார்வையில், கண்ணன் பார்வையில், புதுமைப்பெண் பார்வையில், பாப்பா பார்வையில், குயில் பார்வையில், சித்தர் பார்வையில், பாரதி பார்வையில், என பத்து பார்வைகளில் பாரதியாரை முத்து முத்தான கவிதை வரிகளால் படம் பிடித்திருக்கிறார் கவிஞர். பாரதியை அங்கங்கே அனுபவித்தவர்கள் முழுமையாய், நீள் கவிதையாய் அனுபவிக்க ஒரு வாய்ப்பு இந்த நூல்.
பாவேந்தரின் நூல்களை பத்து தலைப்புகளில் எடுத்துக் கொண்ட கவிஞர் பத்து பத்து பாடல்களாக எழுதி இருக்கிறார். பா வகைகள் பற்றி அவசியம் குறிப்பிட வேண்டும். பாவேந்தர் எண்சீர் விருத்தத்தில் பாண்டியன் பரிசைப் பாடினார் என்றால் அதைப்பற்றி இவரும் எண்சீர் விருத்தத்தில் பாடுகிறார். அழகின் சிரிப்பு அறுசீர்விருத்தம் என்றால், இவர் பாடுவதும் அறுசீர்விருத்தம். மணிமேகலை வெண்பா எனில், தாமும் வெண்பா பாடுகிறார். எதிர்பாராத முத்தம் சிந்துநடை என்றால் இவரும் அதையே தொடர்கிறார்.
Release date
Ebook: 19 December 2022
English
India