Step into an infinite world of stories
Biographies
ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியாக 51 கவிஞர்கள் இயற்றியுள்ள ஓராயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இவை மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது. இந்த மூன்றாம் பாகத்தில் கே.பி.அறிவானந்தம் இயற்றிய பாடல்களோடு இன்னும் 27 கவிஞர்கள் இயற்றிய 422 பாடல்கள் இடம் பெறுகின்றன.
புலவர் கு.பொ.பெருமாள், ஹா.கி.வாலம் அம்மையார், ப.ஜீவானந்தம், தேனம்மை லட்சுமணன்,கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி மன்னை பாஸந்தி, ச.நாகராஜன். பாவலர் கி. பாரதிதாசன், பிரான்சு கலைமாமணி புலவர் நாகி, தமிழ்மாமணி புலவர் சீனு. இராமச்சந்திரன், கலைமாமணி இலந்தை இராமசாமி கனடா, கவியோகி வேதம்,பாவலர் எஸ். பசுபதி, கனடா, புதுவையைச் சேர்ந்த கல்லாடன், பாவலர் அண்ணா. தருமலிங்கம், புலவர் செ. இராமலிங்கன், புலவர் துரை. மாலிறையன், பாவலர் சூரிய விசயகுமாரி, கவிஞர் தே. சனார்த்தனன், பாவலர் வே. முத்தையன், கவிஞர் வ. பழனி,கவிஞர் மு. தியாகராசன், கவிஞர் இராச.தியாகராசன் புலவர் மு. இறைவிழியனார்,பாவலர் சிவ. இளங்கோ கவிஞர் முனைவர் உரு. அசோகன், கவிஞர் ந. இராமமூர்த்தி ஆகியோரது பாடல்கள் இந்த மூன்றாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.
கவிஞர்களைப் பற்றிய அறிமுகமும் நூலில் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் கவிதையில் உள்ள நுட்பமான விஷயங்களை இந்தக் கவிதைகளில் காணலாம். அத்தோடு கவிஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அறியலாம். பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய கவிதைகள் இவை. அனைவருக்கும் பரிசாகக் கொடுக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 28 March 2025
English
India