Step into an infinite world of stories
Biographies
முனைவர் சுடர்க்கொடி கண்ணன் அவர்கள் எழுதிய மாமனிதர் புக்கரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல், மாணவர்களுக்கு நல்லறிவூட்டுவதாய் உள்ளது. கல்வியின் பெருமையையும், உழைப்பின் உயர்வையும் நமக்கு உணர்த்துகிறது. 'ஒருவர் உண்மையாக உழைத்தால், தாமும் உயர்ந்து, தம் இனத்தவரையும் உயர்த்தி விடலாம்' என்று வழிகாட்டுகிறது இந்நூல். திக்கற்ற ஏழையாய் பிறந்து, இடைவிடா உழைப்பால் படிப்படியாய் உயர்ந்தவர் புக்கர் என்பதைப் படிக்கும் போது 'நாமும் உழைத்தால் முன்னேறலாம்' என்னும் நம்பிக்கை விதையை நமக்குள் விதைக்கிறது. இந்த நம்பிக்கை விதை விருட்சமாக மாற, தமிழ்நாடு தழைக்க - தமிழ்க்குடி உயர, தமிழ் நாட்டு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் விரைந்து முன்னேற, இந்நூலைப் படித்துப் பயன்பெறுவார்களாக!
முனைவர் C. சைலேந்திர பாபு, IPS
தலைமை இயக்குநர். தமிழ்நாடு காவல்துறை
Release date
Ebook: 3 March 2023
English
India