Step into an infinite world of stories
Religion & Spirituality
கம்பன் ஒரு கடல். கம்பரசம் ஒரு தெவிட்டாத அமுது. பருகியவருக்குத் தான் அதன் பரவசம் புரியும். எத்தனையோ கதை மாந்தர்கள் கம்ப காவியத்தில் உலவினாலும் 'தீயோரில் நல்லவனாய்' விளங்கிய வீடணனின் பாத்திரப் படைப்பை வைத்தே உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. கம்ப காவியம் என்னும் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் போது கிளிஞ்சல்களும், சங்குகளும் சிக்குவதைப் போல எனது படைப்பில் சிற்சில தவறுகள் என் கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கலாம். அதற்கெல்லாம் நானே பொறுப்பு. அறிவுசால் ஆன்றோர் படிக்கும் போது தென்படும் குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன். 'தீயோருள்ளும் நல்லோருண்டு', 'அவர்தம் வழி அறவழியாகும்' என்ற கருத்தை விளக்க வேண்டும் என்ற ஒரு உந்துதலில் எழுதப்பட்டது தான் கம்பன் கண்ட இராமனும் இலங்கைத் தம்பியும்! என்ற நூல். இராமனுக்குப் பாலம் அமைக்க மண் சுமந்த அணிலைப் போல கம்பனின் புகழ் சேர்க்க என்னால் முடிந்த சிறுமுயற்சி! பிறப்பால் அரக்கனானாலும், எண்ணத்தால், சொல்லால், செயலால் அறநெறி நின்ற வீடணன், இராமனுக்கு ஏழாவது இலங்கைத் தம்பியாக உருவான விதத்தை விளங்கும் பாங்காய் அமைந்ததாகும்.
Release date
Ebook: 17 May 2021
English
India