Step into an infinite world of stories
“பெண்கள் கனவு காண்பது தவறா? தன் வாழ்க்கை இப்படி அமைந்தால் நல்லது என்று அவள் ஆசைப்படக்கூடாதா? இது எந்தவிதத்தில் தவறு?” என்று கேட்டேன். காலத்துக்கேற்ப பெண்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அதிகரித்துக் கொண்டே போகின்றனர் என்பது தெளிவாகப் புரிந்தது. கனவு காண எந்தப் பெண்ணுக்கும் உரிமை உண்டு. ஆனால் எல்லா கனவும் நினைவாகுமா...? இந்தக் கேள்விதான் இந்த நாவலுக்குக் கருவாக அமைந்திருக்கிறது.இந்நாவலின் நாயகி விஜயாவுக்கு ஆசைகள் நிறைய உண்டு. அந்த ஆசைக்கனவுகளை, அவளைச் சென்னைக்கு அழைத்துவந்து, கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்து ஆளாக்கிய சித்தப்பா குடும்பத்தின் மூலமே நிறைவேற்றிக் கொள்ளக் கனவு காண்பதுதான் விபரீதமாகிவிடுகிறது. இதனால் சித்தப்பா குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவளும் பாதிக்கப்படுகிறாள். அவளது நடவடிக்கைகள் அவளை எங்கே கொண்டு செல்கின்றன என்பதுதான் இந்நாவலின் கதையோட்டம். ஆசைக்கு அளவேயில்லை. ஆசைப்படுவதற்குக்கூட ஒரு எல்லை உண்டு என்பதை இந்த நாவல் மூலம் இந்தக் காலப் பெண்களுக்குத் தெரிவிக்க நினைக்கிறேன்.
Release date
Ebook: 27 June 2022
English
India