கதைக்கு எந்தக் கருவை எடுத்துக் கொண்டாலும் அதற்குப் பின்னணியை கானவேணும் சரியானப்படி காட்டவேண்டும் என்று எண்ணுகிறவன் நான். அதற்கான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வேன். அப்படியும் கூட, பல சமயங்களில் ஏதேனும் தப்பாகிவிடுவதுண்டு.
கதைக்கான பின்னணியைத் திகட்டித் தருவதில் அனேக நண்பர்கள் கைகொடுத்திருக்கிறார்கள். ‘உள்ளேன் அம்மா’ கதையில், பெண்கள் ஊடே கல்லூரி வரிவுயாளரைக் கதாநாயகியாக வைத்து எழுத ஆசைப்பட்டேன். நண்பர் எஸ். ரஜத் இதற்குப் பெரும் உதவி செய்தார். தனக்குத் தெரிந்த விரிவுரையாளரிடம் பேட்டிக் கண்டு விவரம் தந்தார். இந்தக் கதையில் ஏதேனும் சுவாரசியம் இருக்குமானால் அந்தப் பெருமை நண்பர் ரஜத்துக்கே சேரும்.
சரியாய் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட குறுநாவல் இப்போதுள்ள கல்லூரி சூழ்நிலைகள் எவ்வளவோ மாறியிருக்கும். அதற்காக அன்பு கூர்ந்து சிரிக்காதீர்கள்.
ரா. கி. ரங்கராஜன்
Release date
Ebook: 18 May 2020