1 of 60
Non-Fiction
சிறுகதை, குறுநாவல், நாவல், பயணக் கட்டுரை, வாழ்க்கைச் சரிதம், சிறுவர் கதை - என்று இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் பங்களிப்பு செய்துள்ள சிவசங்கரி (பிறப்பு: 14-10-1942), அமெரிக்காவிலுள்ள அயோவா மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் முகாமில் 1986-ஆம் ஆண்டில் பங்கு பெற்றவர். இவரது படைப்புகள், எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி. பட்டங்களுக்காக மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளதோடு, பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாகவும் வைக்கப்பட்டுள்ளன. கஸ்தூரி சீனிவாசன் பரிசு, பாரதீய பாஷா பரிஷத் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது, சர்வதேச மகளிர் சங்கத்தின் 1999-ஆம் ஆண்டின் சிறந்த பெண்மணி விருது, கொல்கத்தாவிலுள்ள ராஷ்ட்ரீய இந்தி அகாடமியினரின் ‘பிரேம்சந்த் ராஷ்ட்ரீய சாகித்ய சம்மான்’ - இவர் பெற்றுள்ள கௌரவங்களில் சில. தனிமனித மேம்பாட்டுக்காகப் பாடுபடும் ‘அக்னி’ (AGNI Awakened Group for National Integration) - என்ற அமைப்பின் நிறுவனர் Archives of U.S. Library of Congress-க்காகத் தன் கதைகளைத் தானே படித்துப் பதிவு செய்யும் வாய்ப்பு பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். தற்போது, 18 இந்திய மொழிகளில் ஆய்வு செய்து ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற தலைப்பில் நான்கு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
Release date
Ebook: 28 August 2025