Step into an infinite world of stories
கும்பகோணத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவோடு இரவாகச் சென்னைக்கு ஓடி வருகிறான் ஸ்ரீகாந்த். அவன் யாரைச் சந்திப்பதற்காக அப்படி வந்தான்? அவரைச் சந்தித்தானா?
சென்னையில் அவன் சந்திக்கும் மயூராவுக்கும் அவனுக்கும் இடையே மலரும் நட்பு காதலில் முடிகிறதா? அது காதல் என்று புரியும்போது ஸ்ரீகாந்த்தின் நிலை என்ன?
ஸ்ரீகாந்த்தைத் தேடித் தவிக்கும் அம்மா அடுத்து என்ன செய்கிறாள்? மகனும் தாயும் சந்தித்தார்களா இல்லையா?
இவர்களைத் தவிர ஆந்திராவில் இருக்கும் பெரியவருக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் என்ன சம்பந்தம்? அவர் ஏன் அங்கு தனித்து விடப்பட்டார்?
இத்தனை கேள்விகளுக்கும் விடை இதோ இந்த நாவலில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருக்கிறது.
இதை மிகவும் ரசிப்பீர்கள் என்று எனக்கு நன்றாய்த் தெரியும். ஏனெனில் அந்த அளவுக்கு நானும் ரசித்து எழுதினேன்.
படித்துவிட்டு எண்ணங்களைப் பகிரலாமே?
அன்புடன் வேதா கோபாலன்
Release date
Ebook: 17 May 2021
English
India