Step into an infinite world of stories
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...
என்ற திருமூலரின் திருமந்திரக் கூற்றுப்படி குறையற்ற வாழ்விற்கு வேறு எதுவும் வேண்டாம். மனதை சரியாக வைத்துக் கொண்டால் போதும் என்பது தான் அவர் சொல்லியது. அவர் சொன்னது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக. இன்றைக்கும் நிலைமையில் மாற்றம் இல்லை.
அப்படிப்பட்ட மனது பற்றிய புத்தகம்தான் இது. வெற்றி தோல்விகளுக்கு மட்டுமல்ல, ஒன்றை வெற்றியாகவோ அல்லது அதையே தோல்வியாகவோ பார்க்க வைப்பதும் கூட மனதுதான்.
என்ன ஆராய்ந்தும் முடிக்க முடியாதது. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் முழுதும் புரிந்துகொள்ள முடியாதது. எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது... எல்லாமே மனம்தான்.
மனதை வியந்து, நான் எழுதியதுதான் இந்தப் புத்தகம்.
சோம. வள்ளியப்பன்
Release date
Ebook: 3 January 2020
English
India