Step into an infinite world of stories
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொலவடையே தவறு. வினை விதைத்தால் வினையே விதைத்தவனை அறுத்துப் போட்டுவிடும் என்ற பேருண்மையை விளக்கும் கதைதான் நீ எனது இன்னுயிர்.
ஒரு பெரிய பட்டுப்புடவை சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான ரெங்கநாதன் தன்னுடைய சொந்தத் தம்பிகளால் மிக மோசமான முறையில் வஞ்சிக்கப்படுகிறார். முந்நூறு கோடி ரூபாய் சொத்துக்களை இழந்ததுகூட அவரைப் பாதிக்கவில்லை, தான் பிள்ளைகள்போல் வளர்த்த தம்பிகள் தன்னைக் கொடூரமாக முதுகில் குத்திவிட்டார்களே என்ற அதிர்ச்சியில் இதயம் வெடித்து இறந்துவிடுகிறார்.
ரெங்கநாதனின் மனைவி பரிமளா, மகன் சிவா, மகள் மால்யா, பரிமளாவின் தங்கை பத்மா – இவர்கள் எப்படி சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்ந்துகாட்டி துரோகிகளைப் பழிவாங்குகிறார்கள் என்பதுதான் நீ எனது இன்னுயிர் குறுநாவலில் கதைச் சுருக்கம்.
நடுவே சிவாவிற்கும் சஞ்சனாவிற்கும் இடையே மலரும் இனிமையான காதல், சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு பெரிய நடிகர் காட்டும் அன்பு, இறைவனின் புகழ்பாடும் துறவி அம்பிகா தேவியின் ஆன்மிக விளக்கங்கள் என்று கதை தொடர்கிறது. கடைசியில் வினை விதைத்தவர்களை அவர்கள் விதைத்த வினை எப்படி அறுக்கிறது என்று சொல்கிறது நீ எனது இன்னுயிர்.
Release date
Ebook: 19 October 2021
English
India