Step into an infinite world of stories
சமூகக் கண்ணோட்டத்துடன் ஒரு நாவல் எழுதும் படி அமரர் எஸ்.ஏ.பி. பணித்ததற்கேற்ப இந்த நாவலை எழுதினேன். கோத்திரப் பிரசினையை எடுத்துக் கொள்ளும்படி சொன்னவரும் அவர்தான். கோத்திரம் என்பது இந்துக்களில் சில வகுப்பினரிடையே மட்டும் இருந்து வருகிற விஷயம். அதுகூடப் பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. சில குழப்பங்களுடனும் தடுமாற்றங்களுடனும் நான் எழுதி முடித்த தொடர்கதை இது.
எனினும் காதலும் இளமையும் இந்தக் கதையில் நயமாகவும் சுவையாகவும் வந்திருக்கிறதென்று பல வாசகர்கள் பாராட்டினார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது சமீப காலத்துப் புரட்சிக் கருத்து. இந்தியில் ஒரு திரைப்படம் கூட அண்மையில் வெளிவந்திருக்கிறது. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பே நான் அப்படி எழுதியிருப்பதை எண்ணி ஆச்சரியமாகவும் இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.
கதைக்கு நிச்சயமான ஒரு முடிவைத் தராமல் இரண்டும் கெட்டானாக விட்டிருக்கிறேன் என்று சில வாசகர்கள் அப்போது தெரிவித்தார்கள். இருக்கலாம். டாஃபன் டு மாரியர் என்ற பிரபல நாவலாசிரியரின் சில நாவல்கள் அப்படி முடிந்திருக்கும். கதையின் முடிவை வாசகர்களின் ஊகத்துக்கு விட்டிருப்பார். அவருடைய படைப்புக்களினால் ஏற்பட்ட தாக்கம் என்னை ஓரளவு பாதித்திருந்த கட்டம் அது. அதனால்‘ராசி’யின் முடிவும் அப்படி அமைந்திருக்கக் கூடும்.
ரா.கி. ரங்கராஜன்
Release date
Ebook: 2 June 2020
English
India