Step into an infinite world of stories
Fiction
இந்த நூலை எழுதுவதால் எனது எழுபது ஆண்டு காலத்துக்கும் மேலான வாழ்க்கையின் இனிய பல தருணங்களை நினைவில் மீண்டும் நான் வாழ்ந்து பார்க்க முடிகிறது. பல நினைவுகளை காலம் அவ்வப்போது இனிமையாக்குகிறது. அவற்றை அசை போடுவது மகிழ்ச்சியான அனுபவம். இருபதாம் நூற்றாண்டில் நிலைமைகள் எப்படியிருந்தன என்பதை இந்த என் சுயசரிதை வருங்கால சந்ததியினருக்குக் கொடி காட்ட உதவும். இதில் நினைவு கூரப்பட்டுள்ள அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன சம்பவங்கள் அவர்களுக்குச் சுவையாக இருக்கலாம்.
எனவே நானும் நினைவுகளைச் சேமிக்கிறேன். 2050ம் ஆண்டுக்குப் பின்னர் இருக்கப்போகும் நமது கொள்ளுப் பேரன், பேத்திகளை நினைத்துப் பார்க்கிறேன். நமது கொள்ளுத் தாத்தாக்கள் வாழ்ந்த காலம் பற்றிய நினைவுகள் நமக்கு மிக மங்கலாகவே இருக்கின்றன.
விமரிசகர் ஈபன் அலெக்ஸாண்டர் எழுதியபடி, “இது ஒரு சுயசரிதை அல்ல. ஆசிரியரின் வாழ்வில் அவர் சந்தித்த செயல் நிறைந்த நிகழ்ச்சிகளின், சம்பவங்களின் உண்மையான நினைவுகள்”.
Release date
Ebook: 22 November 2021
English
India