Step into an infinite world of stories
Fiction
நான் 68 வயதான நுண் கருவியியல் ஆலோசகன். (instrumentation consultant).
அமரர் திரு. அப்துல்கலாம் அவர்களும், அமரர் திரு சுஜாதா அவர்களும் படித்த சென்னை தொழில் நுட்பக்கல்லூரியில் (MIT) தொழில் நுட்பம் பயின்ற பாக்கியவான்.
பல்லாண்டுகளாக தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் படைப்புகள் பல படித்து நானும் எழுத ஆசைப்பட்டு, சில வருஷங்களாக சமூக தளங்களில் சிறு கதைகள் பல எழுதியுள்ளேன்.
என் கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய நண்பர்கள் இக்கதைகளைப் புத்தகமாக வெளியிடும்படி வற்புறுத்தியதால் இந்த முயற்சி.
என் பிறந்த ஊரான திருநெல்வேலியின் பக்கத்தில் தாமிரபரணிக் கரையில் அமைந்த கோடகநல்லூரின் பின்புலத்திலும் சில கதைகள் எழுதியுள்ளேன். இதனால் இச்சிறுகதைத் தொகுப்புக்கு "தாமிரபரணிக் கரையினிலே" என்று பெயரிட்டுள்ளேன்.
- கி. ரமணி
Release date
Ebook: 30 September 2020
English
India