Step into an infinite world of stories
Religion & Spirituality
திருப்புகழை அறியாத தமிழர் இல்லை; திருப்புகழைப் பாடாத முருக பக்தர் இல்லை. அருணகிரிநாதரின் சந்தத் தமிழ் நடை, தமிழ் அன்பர்கள் அனைவரையும் மகிழ்விக்கும். அவருடைய வாக்கு ஒவ்வொன்றும் இறைவன் அருளில் உதித்த வாக்கு; அப்பேற்பட்ட பெரியாரின் வாயிலிருந்து உண்மை மட்டுமே வெளிப்படும். அவருடைய பாடல்களில் ஒன்றில் திருப்பதி மலை மேல் உறையும் வெங்கடேசப் பெருமாளை முருகன் என்று சொல்லிக் கவி பாடுகிறார். அதுபோல மேலும் சில புதிர்களும் அவருடைய திருப்புகழ் பாடல்களில் உள்ளன. அவைகளுக்கு இதுவரை திருப்தியான, எல்லாரும் ஏற்கக்கூடிய, விடை கிடைக்கவில்லை. இதுபற்றி நான் எழுதிய பின்னர் டில்லி நகர தமிழ் அறிஞர் பி. கண்ணனும் அதற்கு விடை காண முயன்று எழுதிய பதிலையும் இந்த நூலில் சேர்த்துள்ளேன். கண்ணன் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.
Release date
Ebook: 17 August 2022
English
India