ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
உமையவன் எண்ணற்ற படைப்புகள் மூலம் அறிவுலகத்திற்குப் பங்களித்திருக்கிறார். அவரை மூத்த தமிழறிஞர்கள் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.
சிறுவர் இலக்கியத்திற்கு அண்மைக் காலங்களில் பங்களிப்பவர்கள் மிகவும் குறைவு. அதிலும் குறிப்பாக, அறிவியல் தொடர்பான செய்திகளை சுவைபடச் சொல்வது இன்னும் அரிது. அந்த முயற்சியில் நூலாசிரியர் ஈடுபட்டு எளிதில் வாசிக்கத் தகுந்த சிறுநூலை கதை வடிவத்தில் உருவாக்கித் தந்திருக்கிறார். உரையாடல் நடையில் அமைந்திருக்கும் இந்த நூல் வாசிப்பில் மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
பிரபஞ்சம் உருவானதைப் பற்றி மாணவர்களிடம் ஆசிரியர் விளக்குவதைப்போல ஆரம்பித்த முதல் கதை மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவதாகஇருக்கிறது. 'ஆகாய வீடு' என்கிற இரண்டாது கதையில் விண்வெளி நிலையத்தைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். பெரியவர்களுக்குக் கூட அதில் புதிய செய்திகள் புதைந்து கிடக்கின்றன.
நாணயங்களை வைத்து தண்ணீர் படாமல் காசு எடுக்கும் கலையிலிருக்கும் அறிவியலைச் சுட்டிக் காட்டுகிறார். மழை எப்படி உருவாகிறது என்பதை நேர்த்தியாகச் சொல்லித் தருகிறார். சூரிய கிரகணத்தைப் பற்றியும் சுவையாகத் தெளிவுப்படுத்துகிறார். ஓசோன் படலத்தின் ஓட்டையைப் பற்றி அக்கறையுடன் பேசுகிறார். மின்னணுக் கழிவுகளைப் பற்றி நம்மை எச்சரிக்கிறார். கழிவுகளை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். பூச்சிகளைப் பற்றி ஆர்வத்தைத் தட்டான் என்கிற பூச்சியைக் கொண்டு விளக்குகிறார்.
இப்படி ஒரே மூச்சில் படித்து விடக் கூடிய எளிய கதைகளை இந்தத் தொகுப்பில் அவர் அளித்திருக்கிறார். பெற்றோர் இதைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்தால் சரளமாகப் படிக்கவும், அறிவியலை அறியவும் இது உதவும். உமையவன் பாராட்டுக்குரியவர்.
வெ. இறையன்பு
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย