ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
เรื่องสั้น
சிறுகதை எழுதுவதில் உள்ள சூழலை மனத்தில் வைத்து எழுதிய என்னுடைய முதல் கதை பிரசவங்கள் என்பதாகும். ஆனால் அதற்குப் பின்னால் எழுதிய எதிரும் புதிரும் என்ற சிறுகதையே முதன் முதலாக 1993 இல் வெளியானது.
நம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தவும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் சிறுகதைகள் முக்கிய காரணியாக அமைகின்றன. சிறுகதைகள் எழுத எனக்கு முழு ஆர்வத்தையும் ஆரம்பம் முதல் கொடுத்து வருபவர் நண்பர் முனைவர் க.அன்பழகன் அவர்கள். அவருக்கும், இந்த ஆர்வத்தைத் தூண்டிய மற்ற நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய சிறுகதைகள் குங்குமம், பாக்யா, மாலைமுரசு, சாவி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழ் அரசி, வாசுகி, மேகலா, உஷா, ராஜரிஷி உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கதைகள் பல்வேறு காலகட்டத்தில் வந்ததால் நடையில் வேறுபட்ட சில மாற்றங்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள் ஒரே மாதிரி தொடர்ந்து வருவது, சில கதைகள் சிறிதாக அமைந்தமை, சில கதைகளில் ஆங்கிலச் சொற்களின் பிரயோகம் போன்றவை இதில் காணப்படுவதை உணரலாம். இது ஒரு குறையாகத் தோன்றினாலும் தொகுப்பாக வரும்போது இது தவிர்க்க முடியாததாகிறது.
அன்புடன், பா.ஜம்புலிங்கம்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย