Step into an infinite world of stories
Fiction
கோமல் சுவாமிநாதன் (1935 – 1995) ஒரு தமிழ் நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் இலக்கிய இதழ் 'சுபமங்களா'வின் ஆசிரியராக இருந்தவர். தமிழின் முக்கியமான முற்போக்கு நாடக ஆசிரியராக கருதப்படுபவர்.
மனிதன் என்னும் தீவு, கோமல் சுவாமிநாதன் 1985ம் ஆண்டு எழுதி இயக்கிய நாடகம். வாழ்க்கையின் எதார்த்தத்தை, நடைமுறையை அப்படியே சொல்லும் ரியலிச நாடகங்களின் மத்தியில் சர்ரியலிச பாணியில் கோமல் செய்த சோதனை முயற்சி.
நான்கு ஆண்கள் ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒரு பெண்ணுக்கு தீங்கு இழைக்கிறார்கள். அவர்கள் வெளி மனம் அதை கடந்து சென்றாலும், அவர்கள் உள் மனம் அந்த குற்ற உணர்ச்சியை தூண்டிக்கொண்டே இருக்கிறது. தான் செய்தது தவறா அல்லது கடந்து போக வேண்டிய ஒரு விஷயமா என்ற மனப்போராட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் அந்த நான்கு பேர்.
இந்த நாடகத்தில் அவர்கள் உணர்வுகளை சித்தரிக்க, அந்த உணர்வுகளே ஏதோ ஒரு உருவில் வந்து அவர்களுடன் பேசுவது போல இந்த நாடகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. புதைந்துபோன குற்ற உணர்ச்சிகளை உணர்வதற்கு ஒரு பெண் கதாபாத்திரமும், அதை ஒத்துக் கொள்ளாமல் தடுத்து எதிர்மறை எண்ணங்களை தூண்டுவதற்கு ஒரு பூதம் கதாபாத்திரமும் படைக்கப்பட்டுள்ளன.
ஒரே வீட்டில் தங்கியிருக்கும் கல்லுரி பேராசியர்கள், ஒரு சமையல்காரர், ஒரு கார் டிரைவர், ஒரு விற்பனை பிரதிநிதி, அந்த வீட்டில் எப்போதும் சீட்டாடிக் கொண்டே இருக்கும் ஒரு கும்பல், அந்த வீட்டுக்கு அவ்வப்போது வந்து போகும் பத்திரிகை நிருபர் என்று ஆண்கள் நிறைந்த அந்த வீட்டில் ஒரு பெண்ணின் வருகை எல்லோரையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சித்தரிக்கிறது நாடகம். உணர்வு ரீதியாக மனிதன் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் எப்படி தனித்தனி தீவுகளாக வாழ்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி பேசுகிறது மனிதன் என்னும் தீவு.
Release date
Ebook: 9 July 2025
Tags
English
India