Step into an infinite world of stories
Thrillers
ஆத்மிகாவும் வசுதாவும் கல்லூரித் தோழிகள்..ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கிப் படிப்பவர்கள்.தங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் சினேகிதிகள்.
ஆத்மிகா இனிமையாகப் பாடக் கூடியவள். கல்லூரி விழாவில் பாடிய அவளை தலைமை தாங்க வந்த சிறப்பு விருந்தினரான ஜமீன்தார் தன் வீட்டுக்கு அழைக்க.. கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் இவள் அங்கு செல்ல ஜமீன்தார் மட்டுமல்லாது அவரின் மகன் சசாங்கிற்கும் இவளைப் பிடித்துப் போக இருவரிடையே காதல் ஏற்பட அந்தஸ்து பேதம் காரணம் காதல் மறுக்கப் படலாம் என்று நினைத்து சசாங் தன் நண்பன் விக்ரம் மூலம் பதிவுத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான். ஷேத்திராடனம் சென்றுவிட்ட தன் தந்தையுடன் தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். வசுதாவும் ஓணம் பண்டிகைக்காக கேரளா செல்ல ஆத்மிகா தனித்து விடப் படுகிறாள்.
பதிவுத் திருமணம் செய்துகொள்ள இவள் கிளம்பிய நேரம் சசாங் கொலையான செய்தி கிடைக்க மிரண்டு போன ஆத்மிகா எதையும் சொல்ல முடியாமல் தனக்குள் அமுங்கிப் போக விக்ரம் உதவுகிறான்.
காவல் துறையின் கெடுபிடி ..விழாவைப் புகைப்படம் எடுத்த பாபு என்கிற போட்டோ கிராபருக்கு ஏற்பட்ட சிக்கல் அவர் காமிராவுக்குள் சிக்கிக் கொண்ட கொலைகாரனின் புகைப்படம் என்று ஏக பரபரப்பு..(அப்போது டிஜிடல் கேமிரா வரவில்லை. பிரிண்ட் போட வேண்டிய அவசியம்...)
அந்த கேமிராவைப் பறிக்க சிலர் முயல....
கொலைகாரன் பிடிபட்டானா ?
வசுதா ஏன் காணாமல் போனாள் ?
பாபுவின் நிலைமை என்ன ?
விக்ரம் நல்லவனா? கெட்டவனா?
இத்தனையிலும் ஆத்மிகாவின் பங்கு என்ன? வசுதாவிற்கும் அவளுக்கும் இடையிலான நட்பு என்னவாயிற்று?
யூகிக்க முடியாத நிகழ்வுகள்...
திடீர்த் திருப்பங்கள்....
சில்லிடும் உண்மைகள்.... பயமின்றிப் படியுங்கள்...
ஆங்காங்கே புதுக் கவிதை விருந்தும் உண்டு...
Release date
Ebook: 5 February 2020
English
India