Step into an infinite world of stories
Fiction
“காலங்களில் அவள் வசந்தம்” - மோகனசுந்தரம், அவரோட அம்மா, கோகி, அந்த சைதாப்பேட்டை ஸ்டோர் வீட்டு பேசாத ஈசி சேர், மாமா, திருச்சி மார்கெட்னு மென்மையான காதல் கலந்த கதை, உங்களை நாடகமாக ரசிக்க வைக்கும் என நம்புகிறேன்.
அடுத்து “நினைக்க தெரிந்த மனமே” - மூர்த்தியின் மதுரை வாழ்க்கை, மாலு அவன் வாழ்வில் மெதுவா எட்டிப் பாக்கறது, கூடிய மட்டும் சுவையா ஓடும்.
“என்னதான் நடக்கும்”, ”ஏனிந்த கொலை வெறி”, ”மொத்த வியாபாரம்”, அப்பறம் “கனவுக்கோட்டை” குறுநாவல் பத்தி சொல்லணுமே. தைரியமா ஒரு சரித்திரக் கதை எழுதத் துணிந்தேன், முதல் பகுதி எழுதியும் விட்டேன். அடடா நாம என்ன கல்கியா, சாண்டில்யனா எவ்வளவு தைரியம் இருந்தா இது மாதிரி அசட்டு முயற்சி பண்ணுவோம்னு பயந்து டிராக் மாறிட்டேன்.
கடைசியா “ரத்னாவாகிய நான்” இது பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு உங்கள் கருத்தை எனக்கு சொல்லுங்களேன்.
Release date
Ebook: 10 April 2024
English
India