Romance
நாடறிந்த பிரபல ஓவியர் பிரம்மா. அவர் படம் வரையாத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகளுக்கு உடன் பயிலும் மாணவன் ஒருவன் காதல் கடிதம் எழுதி விட, மனைவியின் வற்புறுத்தல் காரணமாய் பள்ளித் தலைமையாசிரியரைச் சென்று சந்திக்கிறார்.
பல வருடங்களுக்கு முன், தனது பள்ளிக் காலத்தில், தானும் அதே போல் தன்னையும் ஒரு மாணவியையும் இணைத்து பள்ளிச் சுவற்றில் ஒரு ஓவியம் வரைந்து விட, சம்மந்தப்பட்ட மாணவியின் தந்தை நேரில் வந்து அவரைத் தண்டிப்பதற்கு பதிலாய், அவரது ஓவியத்திறமையை பாராட்டி விட்டுச் சென்றது பிரம்மாவின் ஞாபகத்தில் வருகின்றது.
“இன்று அந்த மாணவனை தான் என்ன செய்வது?” என்பது புரியாமல் குழப்பத்துடன் சென்றவர், அந்த மாணவனின் திமிர்த்தனத்தைப் பார்த்து கோபமாகி அவனைப் பள்ளியை விட்டு நீக்கச் செய்து விடுகிறாள்.
மறுநாள், அவன் தன் தாயுடன் ஓவியர் பிரம்மா வீட்டிற்கு மன்னிப்புக் கேட்க வருகிறான். அவன் தாயைக் கண்ட பிரம்மா அதிர்கிறார்....
மீதி நாவலுக்குள்.
Release date
Ebook: 5 February 2020