Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Language
Tamil
Format
Category

Non-Fiction

அறிவு அல்ல; அனுபவம்

கணிதம் குறித்த எளிமையான, ஆர்வத்தை வளர்க்கும் நூல்களை ஆங்கிலத்தில் பார்க்கும் போதும், படிக்கும் போதும் 'எம் தமிழ் நண்பர்களுக்கு தமிழில் இவற்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லையே' என்கின்ற ஏக்கம் ஆழமாக என் மனத்தில் எழுவதுண்டு. அக்குறையைத் தீர்க்கும் மகத்தான பணியை திரு. சிவராமன் அவர்கள் செய்து வருவது தெரிந்து மனம் எழுந்து நின்று மரியாதை செலுத்தியது.

பணத்தைக் கூட தருவதற்கு தயாராக இருப்பவர்கள், அறிவைப் பகிர்ந்து தரத் தயாராக இருக்க மாட்டார்கள். ஏனென்றால், பணம் செலவழிந்துவிட்ட பிறகு நம்மிடமே அவர்கள் திரும்ப வருவார்கள். ஆனால் அறிவு சேமிக்கக் கூடியதாகவும், வளர்வதாகவும் இருக்கும் வற்றாத ஊற்று.

தன் அறிவைத் தன்னுடைய முதலீடாக மட்டும் மாற்றிக்கொள்ளாமல் அனைவரையும் அதில் பங்குதாரர்களாக ஆக்கும் முயற்சியாக 'எண்களின் எண்ணங்கள்' என்கிற அற்புதமான அறிவுக் களஞ்சியம் அவர்களிடமிருந்து விளைந்திருக்கிறது. அதன் ஒவ்வொரு பக்கமும் பரவசமூட்டுகிறது.

நூலில் வாசிப்பதை மிக நேர்த்தியாக முன்னகர்த்திச் செல்ல உதவுகின்றன வண்ணப்படங்கள். வர்க்க எண்களை அறிய உதவும் கட்டம் மிகுந்த சிறப்பு. இரட்டை எண், ஒற்றை எண் போன்றவற்றை அவர் விளக்கக் கொடுத்துள்ள படங்கள் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கும் வாசிப்பை சுலபமாக்கும். அவர் நமக்குத் தெரியாத பல தமிழ் கணிதச் சொற்களை அறிமுகப்படுத்தி, இதனை அருஞ்சொற்பொருட் களஞ்சியமாகவும் ஆக்கியிருக்கிறார். இது தமிழ் ஆட்சி மொழிப் பயன்பாட்டிற்கும் உதவும்.

'வாழ்வோடு தொடர்பில்லாத எந்த அறிவும் பயனற்றது' என்றே கருதவேண்டும். ஒருவர் கணித வடிவியல் மூலம் தன் நிலத்தை உழுவதற்கு எந்த வடிவத்தில் தன் பயிர்களை அமைத்தால் அதிக பரப்பு கிடைக்கும் என்பதையறிந்தால், அதிக லாபம் ஈட்ட முடியும் என்று அவர் உதாரணம் தருகிறார்.

'பை கணித மன்றம்' என்ற அமைப்பின் பணிகள் பாராட்டுக்குரியவை. இது போன்ற நூல்கள் வெளிவரும் பொழுது தமிழ்நாட்டில் கணிதமேதைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். குறைந்த விலையில் நிறைந்த தகவல்களை, 'மலர்களிலிருந்து மகரந்தம் சேகரிக்கும் தேனீக்கள்' போல பை கணித மன்றத்தார் செயல்படுகிறார்கள்.

முனைவர் வெ.இறையண்பு IAS.

செயலாளர்

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை

தலைமைச் செயலகம்,

சென்னை-9

Release date

Ebook: 8 March 2022

Others also enjoyed ...