Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Cover for Jananam

Jananam

4 Ratings

4

Language
Tamil
Format
Category

Fiction

என்னுடைய நாவல்களுக்கோ, சிறுகதைத் தொகுப்புகளுக்கோ முன்னுரை எழுதுவது எனக்குப் பழக்கமில்லாதது. எழுத விருப்பமில்லை என்பதைவிட எழுத எனக்குத் தெரியாது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். கதை எழுதும் போது தயக்கமில்லாமல், சில சமயம் கட்டுக்கடங்காமல் வெளிப்படும் வார்த்தைகள் முன்னுரை எழுத உட்காரும்போது எங்கோ பின்னிக் கொண்டு வெளிவர மறுக்கும்.

கதை எழுதுபவர் தன்னிலை விளக்கம் கொடுக்கத் தேவையில்லை என்று நினைப்பவள் நான். உங்கள் கதை மூலம் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று யாராவது கேட்டால் எனக்கு, எனது எழுத்துக்கு நேர்ந்த அவமானமாக, துர்பாக்கியமாக நான் நினைப்பேன். எழுத்தே பேச வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு ஜீவனில்லை என்றுதான் கொள்ள வேண்டும். கதை எழுதி முடித்த பிறகு அது எழுத்தாளரின் மனத்திலிருந்து வெளியேறி வாசிப்பவனிடம் சென்று விடுகிறது. தான் எழுதியவற்றிலிருந்தே எழுதுபவர் விலகி நிற்கிறார். பாரத்தை இறக்கிய பிறகு அதை நீ சுமந்த கதையைச் சொல்லு, இறக்கிய கதையைச் சொல்லு என்றால் அது என்னைப் பொறுத்தவரை சிரமமான விஷயம். எழுதுவது ஏதோ ஒரு வகையான சுமையை இறக்கத்தான். படிப்பவர் மனத்தில் அந்தச் சுமை சிறிதளவாவது ஏற வேண்டும். அதுதான் எழுத்தின் வெற்றிக்கு அடையாளம். அந்தச் சுமையின் ஜனன ரகசியத்தைச் சொல்வது, பிறவி ரகசியத்தைச் சொல்வது போல. அதனால்தான் வார்த்தைகள் வடிவம் பெறாமல் தயங்குகின்றன கூச்சப்படுகின்றன.

இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ஜனனம்', நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை. என் கணவர் மூத்த பொறியியலாளராக மத்திய பொதுப்பணித் துறையின் ஊழியராகப் பணியாற்றிய போது அவருடன் அந்த மாநிலங்களில் வசித்ததில், அசாதாரண அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. அவை கதைக் களங்களாகப் பரிணமித்தன. தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்ட இடங்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் புதிய தரிசனங்களையும் ஏற்படுத்தின என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

'ஜனனம்' என்ற நாவலுக்கு, நாங்கள் அஸ்ஸாமில் இருந்தபோது நான் கேள்விப்பட்ட ஒரு விபத்தின் விவரம் காரணமாயிற்று. ஒரு பஸ் விபத்தில் ஒரே ஒரு பெண் பிழைத்தார் என்றும், அவருக்கு விபத்தின் அதிர்ச்சியால் தன்னுடைய பழைய வாழ்வு முற்றிலும் மறந்து போனதாகவும் கேள்விப்பட்டவுடன் அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்வைப் பற்றி எனக்குக் கவலையேற்பட்டது. சோகக் கதையாக இல்லாமல் அதை ஒரு காதல் கதையாக எழுதவேண்டும் என்று ஏன் நினைத்தேன் என்று இன்று திட்டவட்டமாகச் சொல்லமுடியவில்லை. நான் பார்த்த ஒரு இந்தி நாடகம் ஆனால் கதையை நானே மிகவும் ரசித்து எழுதியது அதற்குக் காரணமாக இருக்கலாம். நினைவிருக்கிறது. கதை 15 ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடனில் வெளியானது. பிறகு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மாத்ரு பூமியில் பிரசுரிக்கப்பட்டது. அதைப் படித்து மிகவும் ரசித்து 'இந்நிலே' என்ற தலைப்புடன் பிரபல (மறைந்த) பட இயக்குனர் பத்மராஜன் மலையாளத்தில் சினிமா எடுத்தார்.

Release date

Ebook: 3 January 2020

Others also enjoyed ...

  1. Saathaga Paravai
    Saathaga Paravai Anuradha Ramanan
  2. Engamma Maharasi
    Engamma Maharasi Devibala
  3. Idhayam Pohuthe!
    Idhayam Pohuthe! Devibala
  4. Ragasiya Raagangal
    Ragasiya Raagangal Anuradha Ramanan
  5. Saharavil Pootha Roja
    Saharavil Pootha Roja Anuradha Ramanan
  6. Kanna Unnai Marappena?
    Kanna Unnai Marappena? Anuradha Ramanan
  7. Mullodu Oru Roja
    Mullodu Oru Roja Anuradha Ramanan
  8. Sollamaley... Sangeetha
    Sollamaley... Sangeetha Kamala Sadagopan
  9. Chittukuruvi Suttu Pazhagu
    Chittukuruvi Suttu Pazhagu Devibala
  10. Penmai Thorpathillai
    Penmai Thorpathillai Parimala Rajendran
  11. Irandavathu Thenilavu
    Irandavathu Thenilavu Lakshmi
  12. Kaadhal Kadivalam
    Kaadhal Kadivalam Devibala
  13. Idhaya Koyil
    Idhaya Koyil Lakshmi Rajarathnam
  14. Mattikita Maranam
    Mattikita Maranam Devibala
  15. Ennuyir Thozhi
    Ennuyir Thozhi Vidya Subramaniam
  16. Peraatha Pillai
    Peraatha Pillai Lakshmi Subramaniam
  17. Mappillai
    Mappillai Vidya Subramaniam
  18. Sorkkam Pakkathil
    Sorkkam Pakkathil Devibala
  19. Iniyellam Sugame!
    Iniyellam Sugame! Devibala
  20. Andha Yetho Ondru…!
    Andha Yetho Ondru…! Sri Gangaipriya
  21. Purushan Veettu Ragasiyam
    Purushan Veettu Ragasiyam Jyothirllata Girija
  22. Innoruthi + Innoruthi
    Innoruthi + Innoruthi Sivasankari
  23. Samharam
    Samharam Vidya Subramaniam
  24. Jaathimullai
    Jaathimullai Devibala
  25. Vaigarai Kolangal
    Vaigarai Kolangal Devibala
  26. Vizhikkul Vizhundha Macham
    Vizhikkul Vizhundha Macham Hamsa Dhanagopal
  27. Kasthuri Maane...
    Kasthuri Maane... Vidya Subramaniam
  28. Marakka Manam Kooduthillaiye
    Marakka Manam Kooduthillaiye Latha Baiju
  29. Thunaiyai Thedi
    Thunaiyai Thedi Lakshmi Rajarathnam
  30. Nila Sirikkirathu!
    Nila Sirikkirathu! Hamsa Dhanagopal
  31. Kaadhal Ratchagan
    Kaadhal Ratchagan Latha Baiju
  32. Kanavu Mazhai
    Kanavu Mazhai Anuradha Ramanan
  33. Alamarathu Kiligal
    Alamarathu Kiligal Kanchana Jeyathilagar
  34. Idhayathai Koduthu Vidu
    Idhayathai Koduthu Vidu Maheshwaran
  35. Malathi Oru Athirchi
    Malathi Oru Athirchi Lakshmi
  36. Nitham Oru Nilavu
    Nitham Oru Nilavu Anuradha Ramanan
  37. Uchithanai Muharnthal
    Uchithanai Muharnthal Vidya Subramaniam
  38. Ilaiya Manathu Inaiyum Pothu...
    Ilaiya Manathu Inaiyum Pothu... R. Sumathi
  39. Ini Ithu Vasanthakaalam
    Ini Ithu Vasanthakaalam Vedha Gopalan
  40. Suttal Poo Malarum
    Suttal Poo Malarum Devibala
  41. Un Viral Idukkile
    Un Viral Idukkile Ezhilmathi GS
  42. Pillai Prayathiley
    Pillai Prayathiley Vimala Ramani
  43. Kai Serum Neram
    Kai Serum Neram Devibala
  44. Sooriya Vamsam
    Sooriya Vamsam Sa. Kandasamy
  45. Kaadhal Kaithi
    Kaadhal Kaithi Anuradha Ramanan
  46. Kaalaan
    Kaalaan Sivasankari
  47. Sol, Sol, Rathiye!
    Sol, Sol, Rathiye! Arnika Nasser
  48. Maalai Nera Kanavugal
    Maalai Nera Kanavugal Anuradha Ramanan
  49. Tharaiyil Piditha Meen
    Tharaiyil Piditha Meen Maharishi
  50. Mithila Vilas
    Mithila Vilas Lakshmi