Step into an infinite world of stories
Fiction
தஞ்சை ப்ரகாஷ் (1943-2000) என்று தமிழ் இலக்கிய வெளியில் அறியப்பட்ட ஜி.எம்.எல். ப்ரகாஷ் (கார்டன் மார்க்ஸ் லயன்ஸ் ப்ரகாஷ்) கவிஞர். புனைகதை எழுத்தாளர், கட்டுரையாளர். இதழாசிரியர், பதிப்பாளர், ஓவியர், இசைக்கலைஞர், பன்மொழி பல கல்வி கற்றவர், பல தொழில் பார்த்தவர், மொத்தத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் சொல்வதுபோல ஓர் இலக்கிய யோகி என்கிற அளவிற்கு வாய்த்த வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தவர். சொந்த வாழ்விலும் இலக்கியப் படைப்பிலும் சோதனை முறையைப் பின்பற்றுவதையே தன் நெறிமுறையாகக் கொண்டவர். பாலம், குயுக்தம், வெசாஎ - என்று தொடர்ந்து பல்வேறு இதழ் நடத்தும் முயற்சிகளிலும், கதை சொல்லிகள், சும்மா இலக்கியக் கும்பல் ஒளிவட்டம் முதலிய இலக்கிய அமைப்புக்களை நடத்தும் செயல்பாடுகளிலும் எழுத்தாளர்களை ஊர் ஊராகத் தேடி அடைந்து உரையாடுவதிலும் தன் பொன்னான காலத்தையும் முன்னோர் தேடித் தந்த பொருளையும் செலவழித்து ஓய்ந்த ப்ரகாஷ் . 2000-ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் தன் 57-வது வயதில் பயணத்தை முடித்துக்கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தைவிட இப்பொழுது அவர் எழுத்துக்கள் புதிய இளைஞர்களால் பெரிய அளவில் விரும்பி வாசிக்கப்படுகின்றன என்ற உண்மை அவர் எழுத்தின் தீவிரத்தை உணர்த்திக் கொண்டிருக்கின்றது.
Release date
Ebook: 7 September 2023
English
India