Step into an infinite world of stories
வணக்கம்.
“ஒரு தொடர் ஆரம்பிக்கிறீங்க. இன்னும் ஒரே வாரத்தில், அவகாசம் பத்தாதுதான். என்ன செய்யப் போறீங்க?” கேட்டார் ஆசிரியர் திரு. பால சுப்பிரமணியன் அவர்கள்.
“நான் விகடன்ல இதுவரைக்கும் எழுதின ‘தொட்டால் தொடரும்’, ‘கனவுகள் இலவசம்’ ரெண்டுமே குடும்பக் கதைகள். இந்தத் தடவை ஒரு மைல்டான த்ரில்லர் கதை எழுதட்டுமா?” என்றேன்.
“எழுதுங்களேன். கதைச் சுருக்கம் எழுதித் தர்றிங்களா முதல்ல?”
“சொன்னாப் போதும்னா இப்பவே சொல்றனே” என்றேன்.
“தாராளமா சொல்லுங்க” கண்களை மூடிக்கொண்டு கதை கேட்கத் தயாரானார் ஆசிரியர்.
கதையின் முக்கிய ஓட்டத்தை, திருப்பங்களை, சம்பவங்களை, முடிவை நிதானமாக முறைப்படுத்தி சொன்னேன்.
“சரி, எழுதுங்க” என்றவர் தனக்குத் தோன்றிய சந்தேகங்களையும், புதிய கோணங்களையும் சொல்லத் தொடங்கினார்.
கதை மெருகேறிக் கொண்டே போனது.
பிறகு தொடராக எழுதத் துவங்கினேன். அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து தனது யோசனைகளை ஆர்வமாகச் சொல்லி கதையில் மேலும் நகாசு சேர்க்க உதவினார் ஆசிரியர்.
தொடர் எழுதுங்கள் என்று கேட்டுவிட்டு அது என்ன கதை என்று கூட கேட்கத் தயாரில்லாத பல பத்திரிகை ஆசிரியர்கள் மத்தியில் ஆனந்த விகடன் ஆசிரியர் ஒரு தனித்தீவு. அவருடன் கூடிய ஒவ்வொரு சந்திப்பிலும் புதிதாக ஒரு பலம் சேர்ந்து கொள்ளும் எனக்கு.
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்.
Release date
Ebook: 18 May 2020
English
India