Short stories
சிறு கதைகள் எழுதுவது என்பது ஒரு கலையா இல்லையா என்பதை எழுதுகிறவன் சொல்ல முடியாது. ஆனால் எண்ணத்தை வெளிப்படுத்த முயல்கிற, நெருக்கமானவர்களோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிற ஒரு தவிப்பு, ஆர்வம், இவை கலந்த ஓர் இனிய அனுபவம் என்றே நான் உணர்கிறேன்.
'கதை ஆசிரியர் எதற்காக எழுதுகிறார்?' என்பதைப் பற்றி வெகு ரஸமாக விளக்கியிருப்பவர் என்னுடைய வணக்கத்துக்குரிய அமரர் கல்கி. உலகத்தைப் படைப்பதில் கடவுள் காணுகிற ஆனந்தம், கதை எழுதுகிற ஆசிரியனுக்கும் கிடைக்கிறது என்பார் அவர். (பார்க்க... அமரர் கல்கி எழுதிய விமர்சனங்களின் தொகுப்பான 'படித்தேன்... ரஸித்தேன்')
என்னுடைய முதல் சிறுகதை - அச்சில் வெளியானது 1973 ஆம் ஆண்டில். நூற்றுக்கணக்கில் எழுதி விட்டேன் என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியாது. இருப்பினும் தொடர்ந்து அரிதாகவேனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரைகள், பத்திரிகைப் பேட்டிகள் என்று பல துறைகளிலும் தடம் பதிக்கும் இதழாளனாகப் (Journalist) பரிமாணம் அடைவதில் உள்ள சங்கடம் இதுதான். ஆனால் நான் இதழியல் பணிகளோடு விட்டு விடாமல் படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து இருந்து வருகிறேன். இது என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பு.
வாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும்; அவலங்கள் வேண்டாம் என்பதை என்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். அந்த வகையில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'உலகம் என்பது...', 'செவ்வரளி பூத்த வீடு', 'மறுபடியும் என் புல்வெளியில்’ போன்றவை, எழுதியபோது எனக்குத் தந்த மகிழ்ச்சியைவிட, அச்சில் படித்தபோது பேரானந்தத்தை நல்கின.
Release date
Ebook: 18 December 2019
Short stories
சிறு கதைகள் எழுதுவது என்பது ஒரு கலையா இல்லையா என்பதை எழுதுகிறவன் சொல்ல முடியாது. ஆனால் எண்ணத்தை வெளிப்படுத்த முயல்கிற, நெருக்கமானவர்களோடு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முயல்கிற ஒரு தவிப்பு, ஆர்வம், இவை கலந்த ஓர் இனிய அனுபவம் என்றே நான் உணர்கிறேன்.
'கதை ஆசிரியர் எதற்காக எழுதுகிறார்?' என்பதைப் பற்றி வெகு ரஸமாக விளக்கியிருப்பவர் என்னுடைய வணக்கத்துக்குரிய அமரர் கல்கி. உலகத்தைப் படைப்பதில் கடவுள் காணுகிற ஆனந்தம், கதை எழுதுகிற ஆசிரியனுக்கும் கிடைக்கிறது என்பார் அவர். (பார்க்க... அமரர் கல்கி எழுதிய விமர்சனங்களின் தொகுப்பான 'படித்தேன்... ரஸித்தேன்')
என்னுடைய முதல் சிறுகதை - அச்சில் வெளியானது 1973 ஆம் ஆண்டில். நூற்றுக்கணக்கில் எழுதி விட்டேன் என்று என்னால் சொல்லிக் கொள்ள முடியாது. இருப்பினும் தொடர்ந்து அரிதாகவேனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரைகள், பத்திரிகைப் பேட்டிகள் என்று பல துறைகளிலும் தடம் பதிக்கும் இதழாளனாகப் (Journalist) பரிமாணம் அடைவதில் உள்ள சங்கடம் இதுதான். ஆனால் நான் இதழியல் பணிகளோடு விட்டு விடாமல் படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து இருந்து வருகிறேன். இது என்னுடைய ஆறாவது சிறுகதைத் தொகுப்பு.
வாழ்க்கையின் நளினங்களை மட்டும் அப்படியே உணர்ந்து உள்வாங்கி எழுதுகிறேன். எனவே பரபரப்பான எழுத்தாளன் என்று என்னால் முகம் காட்ட முடியவில்லை. நளினங்களை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதும்; அவலங்கள் வேண்டாம் என்பதை என்னுடைய எழுத்துக்கள் அனைத்திலும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளேன். அந்த வகையில் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'உலகம் என்பது...', 'செவ்வரளி பூத்த வீடு', 'மறுபடியும் என் புல்வெளியில்’ போன்றவை, எழுதியபோது எனக்குத் தந்த மகிழ்ச்சியைவிட, அச்சில் படித்தபோது பேரானந்தத்தை நல்கின.
Release date
Ebook: 18 December 2019
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India