Step into an infinite world of stories
Fiction
திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த பூர்ணிமா, தன் தாய் தந்தையர் சொல்லிக் கொடுத்த திட்டத்தின்படி தன் கொழுந்தன் சித்தார்த்தை வளைத்து தன் தங்கை பார்கவிக்கு மணம் முடிக்கத் துடிக்கிறாள். ஆனால், மாமியார் புவனேஸ்வரியோ ஒரே குடும்பத்திலிருந்து இரண்டு மருமகள்களைக் கொண்டு வந்தால் ஒரு ஜோடிதான் நன்றாக இருக்கும், மற்றொரு ஜோடி கஷ்டப்படும் என்று கூறித் தயங்குகிறாள். ஆனாலும், பூர்ணிமா தன் சதியால் வெல்லுகிறாள். ஒரே வீட்டிற்கு இரண்டு மகள்களைக் கொடுத்து, அதன் மூலம் அந்தக் குடும்பத்தின் மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டமிட்ட பூர்ணிமாவின் பெற்றோர் மகள்களைத் தூண்டி விட்டு சொத்தைப் பிரிக்கச் செய்கின்றனர்.
பிரித்து வந்த சொத்தைக் கொண்டு புது தொழில் துவங்கிய சின்ன மாப்பிள்ளை சித்தார்த் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக, ரத்த அழுத்தம் அதிகமாகி கோமாவில் விழுகிறான். குடும்ப வண்டியை ஓட்ட பார்கவி வேலைக்குச் செல்கிறாள். அண்ணனும் தம்பியும் பிரிகின்றனர்.
பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தனரா?....சதித் திட்டக்காரர்கள் ஓய்ந்தனரா?
நாவலைப் படியுங்கள்.
Release date
Ebook: 18 May 2020
English
India