Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருளிய கம்பராமயணத்தின் “சுந்தரகாண்டம்” எனும் இப்பகுதி தற்காலத்து ஆண் பெண் புரிதல்களை நேர்செய்ய நிகழ்ந்த தமிழர்களுக்கேயான படைப்பிலக்கியச் சொத்து. இதனை இறைமைக்கே நிகழ்ந்த சோதனையாக எண்ணி விலகாமல் அனுமன் எனும் மகா இணைப்புப் பாலம் “காலம் தாண்டும் காதல் தூதுவனாக” செயல்பட்டதை புதுக்கவிதை வடிவில் இந்நூலின் வழியே அனுபவிக்கலாம்.
பலவிதமான சோதனைகளையும் இரணங்களையும் இராம பக்தி எனும் ஒரே ஒரு கவசம் தரித்தே அனுமன் எளிதாக தாண்டி விடுவது பக்தியின் சத்திய விலாசம். இப்படி ஓர் தூதுவன் கிட்டியதால் அன்றோ இராமபிரானின் பிரிவும் சீதையின் துயரமும் வலி தாங்கக் கூடிய, தங்க உலோகமாக மாறிற்று. கம்பனோ அந்த பிரிவுத்துயரை தமிழ் மொழியின் அணிகலனாக்கிவிட்டான்!
Release date
Ebook: 3 March 2023
English
India