Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Language
Tamil
Format
Category

Classics

இசைத் தமிழால் பாடுவதற்கேற்ப பழங்காலத்தில் எழுந்த நூல்களில் கலித்தொகையும் ஒன்றாக விளங்குகிறது. பரிபாடலும், கலித்தொகையும் இசைப்பாட்டின் தலைநகரங்கள் என்று உரையாசிரி யர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நூலில் நெய்தல் கலியைப் பாடிய ஆசிரியர் நல்லாந்துவனார். இந்த நூலில் மற்ற கலிகளையும் சேர்த்து கலித்தொகையைத் தொகுத்திருக்கின்றார் என்று உரையாசிரியரான நச்சினாகினியார் எடுத்துக் காட்டுகின்றார்.

இந்த நூல் கலி எனவும், கலிப்பா என்றும் கலிப்பாட்டு என்றும், நூற்றம்பது கலி என்றும் பழைய காலத்து உரையாசிரியர்களால் குறிக்கப்படுகின்றது.

ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலி என்று சொல்லப்படும் நான்கு வகை பா வகையுள் இது கலிப்பா என்னும் பாடல்வகையைச் சார்ந்தது.

மருத நில நாகனார் சொல்வதுபடி இந்த நூலை தொகுத்த நல்லந்துவனார் இவருடைய காலத்திலேயே வாழ்ந்தவர் எனவும், நெய்தல் கலியை இவர் தான் திருப்பரங்குன்றத்தில் சங்கப் பேரவையில் பாடி அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கருத முடியும்.

அகத்தையும் புறத்தையும் போல பல்வேறு புலவர்கள் பல சமயங்களில் செய்த நூல்களில் தொகுப்பு அல்ல இந்த நூல். கலிப்பாட்டின் இனிமையை தமிழ் சான்றோர்கள் உணர்வதற்காக ஐம்பெரும் புலவர்களும் ஐவகை திணைகளையும் தழுவிச் செம்மையுடன் பாடிய நூலாகவே இதை கருத வேண்டும்.

கலித்தொகையில் உள்ள செய்யுட்களில் துள்ளல் ஓசை நயமும், உவமைத் திறமும், அறங்களின் செறியும் எடுத்துக் காட்டும் அர்த்தங்களும், திணை சார்ந்த விலங்குகளையும், அந்த நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்வையும் நன்கு அறிந்து கொள்ள முடியும்.

கலித்தொகை நூல்கள் முன்னிலைப் பேச்சாக அமைந்தவை. பேசக் கூடியவர்களின் பேச்சுடன் நம்மையும் சேர்த்துப் பிணைத்துக் கொள்வது. அவர்களின் உணர்வுடன் நம்மையும் ஒருங்கே இணைத்துக் கொள்வது. அருமையான கனிவையும், நிறைவையும் எழச் செய்பவை.

தமிழின் பெருமை அனைத்தும் கொண்டவை யாக விளங்குகின்றன. கலித் தொகை செய்யுட்கள் காவிய நாடகங்கள் போல நமக்கு முன்பு தோன்றி நம்முடைய மனத்திரையில் இன்ப மயக்கத்தை உண்டாக்குகின்றன.

மக்களின் இயல்பான வாழ்க்கையை விளக்கக் கூடியதாக கலித்தொகை செய்யுட்கள் அமைந் துள்ளன. சங்க காலத்தில் ஐந்து வகை நில மக்களின் வாழ்க்கை நிலைகளையும் சுவை குறையாமல் அழகுடன் சொல்லோவியமாக நிலை நிறுத்துகிறது.

மிகுந்த கற்பனைகளாக பாடாமல் இயற்கையாகத் தோன்றிய செவ்வியல்களை சொல்லோவியமாக காட்டி அமைத்துள்ளனர். கலித்தொகையில் உள்ள எல்லா செய்யுட்களும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகளை ஓவியமாக்கி காட்டுவதன் மூலம் பிற்காலத்தில் வாழ்பவர்கள் அதை அறிந்து புரிந்து கொள்ளவும் பயன்படும் உயிரோவியங்களாக உள்ளன.

இத் தொகையின் இன்னொரு சிறப்பாவது, இதன் பாலுள்ள ஐந்தில் இரண்டைப் பாடியவர் சேரரும், சோழருமான தமிழரசர் குடியிற் பிறந்தாராக விளங்குவதாகும்.

அவர்தாம் தம் செய்யுட்களில் பாண்டி நாட்டை மனங்கலந்து போற்றிப் பாடியிருப்பது, பாண்டியரின் பண்பு மேம்பாட்டிற்கு நல்ல சான்றாகும். அவர்தம் தமிழ்த் தலைமையின் செவ்வியை உணர்த்துவதுமாகும்.

தமிழறிந்தார் கற்றறிந்து இன்புறுதலின் பொருட்டாகத் தம்முடைய பெரும்புலமையால் இச் செய்யுள்களைச் செய்து வழங்கினோர். 1. பாலை பாடிய பெருங்கடுங்கோ, 2. கபிலர், 3. மருதனிள நாகனார், 4. சோழன் நல்லுருத்திரன், 5. ஆசிரியர் நல்லந்துவனார் என்போர் ஆவர்.

இவர்களின் சீர்த்த செய்யுட்களுக்கு முதலில் உரைகண்டவரோ, உச்சிமேற் புலவர் கொள்ளும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் ஆவர்.

Release date

Ebook: 12 August 2021

Others also enjoyed ...