Step into an infinite world of stories
Classics
அறிவுசார் அந்தணர் என்று கூறப்படும் சங்கப் புலவர்களுள் சிறந்தவர்களுள் ஒருவரான கபிலரால் பாடப்பட்டது. இவர் பறம்பின் கோமான் என்று போற்றப்படும் பாரி வள்ளலின் உயிர்த்தோழர் ஆவார். இவரைப் பற்றி பல்வேறு கதைகள் வழக்கத்தில் கூறப்படுகின்றன.
இந்த நூலுக்கு உரை எழுதிய நச்சினார்கினியர் கூறும் உரையை ஆதாரமாகக் காட்டி ஆரிய மன்னன் பிரகதத்தனுக்கு தமிழ் மொழியைப் பற்றி அதன் சிறப்பைப் பற்றி அறிவிப்பதாக இந்த நூல் இயற்றப்பட்டது என்று கூறுவர்.
இந்த நூல் 261 அடிகளைக் கொண்டது. காதலர்களின் களவு ஒழுக்கத்தை சிறப்பித்து கூறக் கூடியது இந்த நூல். இந்த நூலில் காந்தள் பூ முதல் எருக்கப் பூ வரையிலுள்ள 109 மலர்களை இந்த நூலில் இவர் குறிப்பிடுகிறார்.
குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கத்தை அழகு பட அமைத்துக் காட்டுவதில் இந்த நூலுக்கு இணையான நூல் இதுதான் என்று கூறப்படுகிறது.
Release date
Ebook: 29 July 2021
English
India