Classics
ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. மூதுரை ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதிநூல். மூதுரை (மூத்த+உரை) என அழைக்கப்படுகிறது. நான்கு எளிய வரிகளில் வாழ்வின் சரியான நடைமுறைகளை சொல்வதால் இது எல்லோருடைய மனதுக்கும் இனியதாக உள்ளது.
மூதுரைக்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப்பாடல் “வாக்குண்டாம்” என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது. இச்செய்யுள்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஒளவையார் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.
இந்தப் புத்தகத்தில் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் ஆறு எழுத்தாளர்கள் எளிய கதைகள் மூலமாக மூதுரையை விளக்கி உள்ளார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்துப் போற்றி பாதுகாக்க வேண்டிய புத்தகம்.
Release date
Ebook: 12 April 2025