Fiction
விடியாமல் போகும் இரவைப் பற்றி நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன். மரணம் என்பது அவனுக்கான உலகம் அழிவதைத் தவிர வேறில்லை. பிறந்ததிலிருந்து நாம் உடலுக்குத்தான் அதி முக்கியத்துவம் கொடுக்கிறோம். வாழ்வின் ரகசியங்கள் நமக்கு புரிபடுவதேயில்லை. அநேகம் பேர் பிறவி சுழற்சியிலிருந்து விடுபடுவதேயில்லை. ஆசையால் உந்தப்பட்டு அவர்கள் செய்த செயல்களே அவர்கள் கட்டுத்தளைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. உலகியல் ரீதியிலான வெற்றி வேண்டுமென்றே கடவுளை வேண்டுகிறார்கள். ஆன்ம விடுதலையை வேண்டி நிற்போர் இந்த உலகத்தில் ஒரு சதவீதத்தினர் கூட இல்லை. நம் பணிகளைத் தள்ளிப்போடாமல் விருப்பத்துடன் செய்து வருவோம். வார்த்தைகளால் அன்பு விதையை விதைப்போம். ஏனென்றால் அந்த விடியாத இரவு இன்றிரவாகவும் இருக்கலாம். நாம் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்குத் தரும் வாய்ப்பு. அன்பை வெளிப்படுத்தி வாழ்ந்து பாருங்கள் இந்த உலகம் தான் சுவர்க்கம் என உணர்ந்து கொள்வீர்கள்.
Release date
Ebook: 1 June 2022