Step into an infinite world of stories
தன் மனைவி இறந்த பின் அந்த இடத்தில் இன்னொருத்தியை அமர வைக்க மனமில்லாத ராஜய்யன் தனியாகவே தவ வாழ்க்கை வாழ்கிறார்.
ஒரு முறை ஜோதிடர், ராஜய்யனின் ஜாதகப்படி அவர் “யார் மீது அன்பைப் பொழிந்தாலும், அவர்கள் இறந்து விடுவார்கள்” என்கிறார். ராஜய்யன் அதை அலட்சியப்படுத்துகிறார். சில நாட்களுக்குப் பிறகு அவர் ஆசையாய் எடுத்து வந்து வளர்த்த நாய் இறந்து போய் விடுகிறது.
ஒரு முறை தனது நண்பர் சிவஞானத்தின் கிராமத்திற்குச் சென்றிருந்த ராஜய்யன் அங்கே ஆற்றங்கரையோரம் அமர்ந்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட குணா என்கிற சிறுவனைப் பார்க்கிறார். தானே அந்தச் சிறுவனை தத்தெடுத்து வந்து வளர்க்கிறார். அன்பையும் பாசத்தையும் கொட்டி அவனை வளர்க்கிறார்.
நல்ல முறையில் வளர்ந்து, சிறப்பாகப் படித்து, வெளிநாட்டில் வேலை பார்க்கச் செல்கிறான். அவன் இந்தியா வந்திருக்கும் போது அவனுக்கு திருமணம் செய்ய நினைத்து பெண் ஏற்பாடு செய்கிறார்.
ஆனால்….அவர் ஜாதகம் விடுமா?
நாவலைப் படியுங்கள்.
Release date
Ebook: 19 October 2021
English
India