Classics
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் சிறுபஞ்சமூலமும் ஒன்றாகும். இந்த நூலை இயற்றிய ஆசிரியர் காரியாசான் என்பவர்.
இதில் காரி என்பது இந்த புலவரின் இயற்பெயர். இதில் ஆசான் என்பது அவர் செய்து வந்த தொழில் குறித்து வந்த பெயராகும்.
இந்த நூலுக்கான பாயிரச் செய்யுள் இந்த புலவருக்கு ‘மா’ என்ற அடைமொழியை மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது.
அதாவது மார்க்காயானர் என்பவரின் மாணவர் இவர். இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றவர்தான் திணைமாலை நூற்றம்பது, ஏலாதி என்ற நூல்களை இயற்றிய கணிமேதாவி என்பவர்.
மேலும் இந்த புலவரைப் பற்றி ‘‘மல்லிவர் தோள்’’ என்று சிறப்பித்து கூறப்படுகின்றார். அதனால் இவர் மற்போரில் சிறந்து விளங்கியவர் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ‘‘செந்தமிழ் தோற்றான் கவி செயலும் நாவகமே நாடின் நகை’’ என்று இவர் கூறியதிலிருந்து, இவர் செந்தமிழில் தேர்ச்சி பெற்றவராய், உயர் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராய் விளங்கினார் என்பது போதருகின்றது. ‘நான் கூட்டம் மூழ்த்தம்’ (42) என்ற பாடலில் சோதிட நூல் கருத்தும் ‘சிக்கர் சிதடர்’ என்ற பாடலில் (74) மருந்துவ நூல் கருத்தும், அமைந்துள்ளதை நேக்குமிடத்து சோதிடம், மருத்துவம், போன்ற பல்துறைக் கலைகளில் வல்லவராக விளங்கினார் என்பது புலனாகின்றது.
நான்கு வரிகளில் ஐந்து அர்த்தங்களை அமைத்துப் பாடும் புலமைத்திறன் பெற்றவராக இந்த புலவர் விளங்கினார். .
சிறுபஞ்ச நூலில் சமண சமய கருத்துகள் சிலவும் பொது சமய கருத்துக்கள் மிகுந்தும் காணப்படுகின்றது.
சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள். அவை 1) சிறுவழுதுணை வேர் 2) நெருஞ்சி வேர், 3) சிறுமல்லிவேர் 4) பெருமல்லிவேர் 5) கண்டங்கத்திரிவேர் என்பதாகும். இந்த ஐந்து வேர் சேர்ந்ததுதான் சிறுபஞ்சமூலம் என்ற நூல் கூறும் கருத்துக்களாகும். வேர்களால் தயாரிக்கப்படும் சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து உடல் நலத்தைக் காப்பாற்றும்.
அதைப்போல, இந்த நூலில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்ட ஐந்த கருத்துக்களும் மனித வாழ்க்கைக்கு பெரிதும் பயன்படக் கூடியது.
திரிகடுகம் நான்கு அடிகளில் மூன்று கருத்துகளை விளக்கி அறியாமையைப் போக்கும் மருந்தை கூறுகிறது.
நான்மணிக்கடிகை நான்கு அடிகளில் நான்கு கருத்துக்களை இந்த மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தி நல்வழி காட்டுகின்றது.
சிறுபஞ்சமூலம் என்னும் நூல் நான்கு அடிகளில் ஐந்து கருத்துக்களைக் கூறி இந்த மனித சமுதாயம் நல்வழியில் வாய்ந்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடையும் வழிகளைக் கூறுகிறது.
ஏலாதி என்னும் நூல் நான்கு அடிகளில் ஆறு கருத்துக்களைக் கூறி இந்த உலகத்தில் துன்பம் நீக்கி செம்மையுடன் வாழ்வதற்கு என்ன வழி என்று இந்த சமுதாய மக்களை வாழ வைக்கின்றது.
இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று அருமையான அரிய கருத்துக்களை அமைத்துக் கொடுத்துள்ளன.
இருப்பினும் திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களும் நோய்களை நீக்கி உடல்நலத்தைக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களால் பாடப்பட்டுள்ளன.
எனவே, இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இன்று அரசாங்கத்தால் மொழி கடந்து, தேசம் கடந்து உலகம் முழுவதும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இவற்றை மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமைத் தரக்கூடிய இந்த நூல்களை அனைவரும் சுவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Release date
Ebook: 17 May 2021
Classics
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் சிறுபஞ்சமூலமும் ஒன்றாகும். இந்த நூலை இயற்றிய ஆசிரியர் காரியாசான் என்பவர்.
இதில் காரி என்பது இந்த புலவரின் இயற்பெயர். இதில் ஆசான் என்பது அவர் செய்து வந்த தொழில் குறித்து வந்த பெயராகும்.
இந்த நூலுக்கான பாயிரச் செய்யுள் இந்த புலவருக்கு ‘மா’ என்ற அடைமொழியை மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது.
அதாவது மார்க்காயானர் என்பவரின் மாணவர் இவர். இந்த ஆசிரியரிடம் கல்வி பயின்றவர்தான் திணைமாலை நூற்றம்பது, ஏலாதி என்ற நூல்களை இயற்றிய கணிமேதாவி என்பவர்.
மேலும் இந்த புலவரைப் பற்றி ‘‘மல்லிவர் தோள்’’ என்று சிறப்பித்து கூறப்படுகின்றார். அதனால் இவர் மற்போரில் சிறந்து விளங்கியவர் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ‘‘செந்தமிழ் தோற்றான் கவி செயலும் நாவகமே நாடின் நகை’’ என்று இவர் கூறியதிலிருந்து, இவர் செந்தமிழில் தேர்ச்சி பெற்றவராய், உயர் கவிதைகளை இயற்றுவதில் வல்லவராய் விளங்கினார் என்பது போதருகின்றது. ‘நான் கூட்டம் மூழ்த்தம்’ (42) என்ற பாடலில் சோதிட நூல் கருத்தும் ‘சிக்கர் சிதடர்’ என்ற பாடலில் (74) மருந்துவ நூல் கருத்தும், அமைந்துள்ளதை நேக்குமிடத்து சோதிடம், மருத்துவம், போன்ற பல்துறைக் கலைகளில் வல்லவராக விளங்கினார் என்பது புலனாகின்றது.
நான்கு வரிகளில் ஐந்து அர்த்தங்களை அமைத்துப் பாடும் புலமைத்திறன் பெற்றவராக இந்த புலவர் விளங்கினார். .
சிறுபஞ்ச நூலில் சமண சமய கருத்துகள் சிலவும் பொது சமய கருத்துக்கள் மிகுந்தும் காணப்படுகின்றது.
சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள். அவை 1) சிறுவழுதுணை வேர் 2) நெருஞ்சி வேர், 3) சிறுமல்லிவேர் 4) பெருமல்லிவேர் 5) கண்டங்கத்திரிவேர் என்பதாகும். இந்த ஐந்து வேர் சேர்ந்ததுதான் சிறுபஞ்சமூலம் என்ற நூல் கூறும் கருத்துக்களாகும். வேர்களால் தயாரிக்கப்படும் சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து உடல் நலத்தைக் காப்பாற்றும்.
அதைப்போல, இந்த நூலில் வரும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லப்பட்ட ஐந்த கருத்துக்களும் மனித வாழ்க்கைக்கு பெரிதும் பயன்படக் கூடியது.
திரிகடுகம் நான்கு அடிகளில் மூன்று கருத்துகளை விளக்கி அறியாமையைப் போக்கும் மருந்தை கூறுகிறது.
நான்மணிக்கடிகை நான்கு அடிகளில் நான்கு கருத்துக்களை இந்த மனித சமுதாயத்திற்கு அறிவுறுத்தி நல்வழி காட்டுகின்றது.
சிறுபஞ்சமூலம் என்னும் நூல் நான்கு அடிகளில் ஐந்து கருத்துக்களைக் கூறி இந்த மனித சமுதாயம் நல்வழியில் வாய்ந்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடையும் வழிகளைக் கூறுகிறது.
ஏலாதி என்னும் நூல் நான்கு அடிகளில் ஆறு கருத்துக்களைக் கூறி இந்த உலகத்தில் துன்பம் நீக்கி செம்மையுடன் வாழ்வதற்கு என்ன வழி என்று இந்த சமுதாய மக்களை வாழ வைக்கின்றது.
இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என்று அருமையான அரிய கருத்துக்களை அமைத்துக் கொடுத்துள்ளன.
இருப்பினும் திரிகடுகம் சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மூன்று நூல்களும் நோய்களை நீக்கி உடல்நலத்தைக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களால் பாடப்பட்டுள்ளன.
எனவே, இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்கள் இன்று அரசாங்கத்தால் மொழி கடந்து, தேசம் கடந்து உலகம் முழுவதும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால் இவற்றை மொழி மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமைத் தரக்கூடிய இந்த நூல்களை அனைவரும் சுவைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Release date
Ebook: 17 May 2021
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India