Step into an infinite world of stories
எனதருமை வாசக கண்மணிகளுக்கு வணக்கம்! வாழ்த்துகள், மீண்டும் ஒரு இனிய தருணத்தில் உங்களுடன் பேசுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மறுபடியும் நன்றியினை இங்கு பதிவு செய்கிறேன்.
கடந்த ஆண்டில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு, ‘மனசெல்லாம் மாயா’ வெளியாகி உங்கள் மனதில் இடம் பிடித்தது. இந்த ஆண்டின் புதுவரவாக ‘பொம்மைச் சிறகுகள்’ சிறுகதைத் தொகுப்பு உங்கள் கரங்களில் தவழ்கிறது.
எழுதுவது ஒரு வரம் என்றால், அதை ஒரு புத்தகமாக பார்ப்பது இன்னும் ஒரு வரம். மலடி ஒரு தாயாவது போல சிறப்பான வரம். அதை இரண்டாம் முறை அடைய வைத்தது இறைவனின் பெருங்கருணை. பல்வேறு பணிச் சுமைகளுக்கு மத்தியில் இந்தக் கதைகளை படித்து, மிக அருமையான அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை வெளியிட்டு என்னை ஊக்குவித்த பத்திரிகைகளுக்கும் அதன் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
எனது இரண்டாவது புத்தகத்திலும், உங்களின் அன்புரை இடம் பெற வேண்டும் என்றதும், தோழமையுடன் தன்னுரை பதித்த இனிய நண்பர் பத்திரிகையாளர், எழுத்தாளர் சபீதா ஜோசப் அவர்களுக்கும் நன்றி.
என்றும் அன்புடன்,
ஜே.செல்லம் ஜெரினா
Release date
Ebook: 3 August 2020
English
India