Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Chiranjeevi

Language
Tamil
Format
Category

Religion & Spirituality

அனுமன் இலக்கணம்

அமைதி, நிதானம், பொறுமை, சகிப்புத்தன்மை, தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல், சரணாகதி பக்தி என்று பல குணநலன்களைக் கொண்டவன் அனுமன். ‘தன்னைக் காத்துக் கொள்பவன் உண்மையான பலசாலி அல்ல, பிறரையும் காக்க முன்வருபவனே சரியான, உண்மையான பலசாலி’ என்ற இலக்கணத்துக்கு விளக்கமாகத் திகழ்ந்தவன்.

ராமாயணக் கதாபாத்திரங்களிலேயே ராமனுக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுபவர் என்றால், அனுமனைத்தான் சொல்ல வேண்டும். ஆனால் ராமாயணக் காதையில் அனாவசியமாக, அதிகமாகப் பேசாத கதாபாத்திரமும் அனுமன்தான். அதனாலேயே கம்பர் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று புகழ்கிறார். பேசாமலிருப்பதும் ஒரு நற்பண்பு என்றால், பேசும் ஒவ்வொரு சொல்லும் பயனுள்ளதாக அமையவேண்டும் என்று சிந்தித்துப் பேசுவதும் ஒரு கலைதான். இந்தவகையில் அனுமனைப் போற்றலாம். உடன் இயங்கும் கதாபாத்திரங்களின் மனோநிலையை உணர்ந்து, அதற்கேற்ப வார்த்தைகளை உச்சரிப்பதில் வல்லவன் அனுமன்.

அசோகவனத்தில் சீதையைக் கண்டபோது, ‘ராம், ராம், ஸ்ரீராம்’ என்று சொல்லித்தான் அவள் முன் அவன் தோன்றினான். சீதையைக் கண்டு, அவளுக்கு ஆறுதல் அளித்துவிட்டு, ராமனை வந்தடைந்த அவன், ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லித்தான் அதுவரை பதைபதைப்புடன் தவித்துக் கொண்டிருந்த ராமனின் மனதுக்கு உடனடி மருந்திட்டுத் தேற்றினான்.

சுக்ரீவனிடம் ராமனைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, சரணாகதியென வந்த விபீஷணனைப் பற்றி ராமனிடம் எடுத்துச் சொல்லும்போதும் சரி, நல்ல பேச்சின் இலக்கணத்தை மிகச் சரியாக அனுசரித்தவன் அனுமன். அமைதியான மனதில் நிதானமான எண்ணம் தோன்றும், தீர்க்கமான சொல் பிறக்கும், ஆக்கபூர்வமான செயல் நிகழும். – இந்த உண்மைக்குச் சரியான உதாரணம், அனுமன்.

அதேசமயம் நியாயமான தருணங்களில், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில், தன் முழு ஆற்றலைக் காட்ட அனுமன் தயங்கியதேயில்லை. அப்போது அவன் ஆக்ரோஷம் கொண்டான் என்றாலும், அதன் விளைவுகளாகத் தீயன மட்டுமே அழிவதாகவும், அங்கே நிலவக்கூடிய நல்லவை காக்கப்படுவதாகவும் மட்டுமே இருந்திருக்கின்றன.

தற்போதைய மனித வாழ்க்கைக்கு ‘அனுமன்’ என்ற வாழ்க்கை இலக்கணம், ஓர் அத்தியாவசியத் தேவை!

-பிரபுசங்கர்

Release date

Ebook: 5 February 2020

Others also enjoyed ...