Fiction
காசி என்னை நேசியில் அனீஷா காசி டிரேவல்ஸில் பணி புரிகிறாள். அதன் உரிமையாளனான காசி இவளை நேசிக்கிறான்.இவளோ வங்கி மேலாளர் ப்ரமோதை காதலிக்க… காசி ,தயாந்த சரஸ்வதியின் ஆஸ்சிரமத்தில் வானப்ரஸ்த நிலையில் வாழும் தன் தந்தையிடம் அனுமதி வாங்க அங்கு செல்ல , தன் நண்பனைச் சந்திக்க அங்கு வந்த அனீஷாவின் தந்தை திருமணத்தை முடிவு செய்கிறார். இதை அறியாத அனீஷும் ப்ரமோதும் பதிவுத் திருமணம் முடிந்த நிலையில் திரும்பி வர.... என்ன நடக்கிறது?
அனீஷாவின் தந்தை தன் நண்பருக்குத் தந்த வாக்குறுதி என்ன ஆயிற்று? அனீஷா ப்ரமோத்தின் திருமண நிலை என்ன?
***
நாணல்கள் இக்கதையில் அபிதகுசலாம்பாள் என்கிற தன் பெயரை அபிதா என்று மாற்றுகிறாள் அவள். குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆரம்பப் பள்ளி ஒன்றில் பணி புரிகிறாள்.அங்கு வரும் அருண் அவளை எந்தவித வரதஷிணைம் இன்றி மணக்க முன்வர இவள் அதிர்ஷ்டத்தை அனைவரும் பாராட்ட அதன் பின் வரும் துரதிருஷ்டம் பிறகு தான் புரிகிறது. முதலிரவன்று அந்த உண்மை புரிகிறது.அருணுக்கு இன்னொரு முகம் இருப்பது தெரிகிறது.ஓயாத குடி,பொம்பளைப் பொறுக்கி என்ற பன் முகம் கொண்ட வித்தகன் என்பது தெரியவர... படுக்கையறை பாம்புக் கீறி சண்டையின் மேடையாக..வன் புணர்வின் நிகழிடமாக இவளுக்கு வாழ்க்கை அமைய கூசிக் குறுகிப் போகிறாள் இவள்.. பெயரைத் தான் மாற்ற முடிந்தது இவளால். தலையெழுத்தை மாற்ற முடியவில்லை.பிரபா என்ற பெ ண் இவள் வாழ்வில் குறுக்கிட அவளிடமும் ஒரு திருமண ஆல்பம் இருக்க அருணை விட்டு விலக இவள் தீர்மானிக்க இவள் தங்கையை பெண் பார்க்க வரும் சம்பந்திகளிடம் அருண் தாறுமாகப் பேச… அவமான பட்ட இவள் தங்கை தற்கொலை செய்து கொள்ள...இறுதியாக அபிதா ஒரு முடிவு எடுக்கிறாள்.
அபிதா எடுத்த முடிவு என்ன?
***
ஊனங்கள் இக்கதையில் முருகேசன் ஒரு கட்சித் தொண்டன்.அவன் வாழ்வில் இணைந்தவள் வள்ளி....கனவுகளுடன் வந்தவள் கட்சிப் பணிகளால் புறக்கணிக்கப் படுகிறாள்.கண்ணப்பன் என்கிற நண்பன் உதவிக்கு வர..கட்சிப் பணிகளால் முருகேசனின் கால்கள் உடைய அவனால் கட்சி வேலைகள் செய்ய முடியாத காரணத்தால் அவன் புறக்கணிக்கப் பட... வள்ளி குடும்பத்தைக் காப்பாற்ற..முருகேசன் சந்தேகப் பட....உடைந்த கால்களும் உருக்குலைந்த வாழ்வுமாய்.. பிறந்த குழந்தையான ஜீவாவுடன் வள்ளி தடுமாற.......
இவர்கள் வாழ்வில் விடி வெள்ளி தோன்றியதா?
***
லாஸ்ட் வார்னிங் இக்கதையில் அபூர்வாவிற்கு அபூர்வமாகப் பிறந்தவள். நீலிமா. மருத்துவர்களால் ப்ளூபேபி என்று அழைக்கப் படும் வினோத வியாதி உடையவள்.ரத்தத்தின் சிவப்பு அணுக்களை வெள்ளை அணுக்கள் தின்றுவிட உடலின் ரத்தம் வற்றி.. அடிக்கடி ரத்த மாற்றம் தேவைப்படும் வியாதி...அவள் க்ரூப் ரத்தம் கிடைக்க வேண்டும். நல்ல உள்ளம் படைத்த சில மனிதாபிமானிகளால் ரத்தம் தானமாகக் கிடைக்க அப்படிக் கிடைத்தவள் தான் சாந்தினி என்ற பெண்ணின் நட்பு. ஆனால் சாந்தினி அபூர்வாவின் கணவன் கிரிதரனின் முன்னாள் காதலி என்பது தெரியவர அபூர்வா கிரிதரனை வெறுக்க ஒரு விபத்தில் கிரிதரன் மரிக்க....முடிவு என்ன?
Release date
Ebook: 18 May 2020