அத்தியாயத்திற்கு அத்தியாயம் விருவிருப்பு - எதிர்பார்ப்பு நம் நெஞ்சை அள்ளுகிறது. இடையிடையே புரியும்படியான உலகியல் தத்துவங்கள், பாயசத்தில் காணும் முந்திரிப் பருப்புகளாகக் காட்சி தருகின்றன.
இயல்பான நடையோட்டத்துடன் கூடிய இக் குடும்ப நாவலில், பெண்கள் அவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுகின்ற துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு துவண்டு விடாமல் அவைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் அவர்கள் முன்னேறும் போது, அவர்களைத் தெய்வமாக வணங்கத் தோன்றுகிறது.
எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தட்டாத படியும், படிக்கப் படிக்க இன்பம் தருமாறும், சமுதாயச் சிக்கல்களையும் பல்வேறுபட்ட மனிதர்களுடைய குணாதிசயங்களையும் கற்பனைத் திறன் கொண்டு, உவமைகளையும் உருவகங்களையும் தந்து, நகைச்சுவை ததும்ப, இந்நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும்.
கதை சொல்லும் உத்தியும் பாங்கும் அருமை. படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் வைக்கத்தோன்றும் வகையில், ஆவலைத் தூண்டில் போட்டு இழுக்கின்றார் ஆசிரியர்.
நூலின் இறுதியில் திருப்புமுனைகளை மிக அற்புதமாகத் தந்து, வெற்றியும், மகிழ்ச்சியும் ஒருசேர அமையும்படி, நாவலை முடித்துள்ள ஆசிரியரின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், படித்து முடித்தபின் நம் கண்முன் நிற்கும் ஆற்றல் படைத்து விளங்குகிறது.
விரச உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பரிசளிப்புக்கு ஏற்ற, கல்லூரிகளில் பாடமாக வைக்கத்தக்க, திரைப்படமாக்குவதற்கு ஏற்ற நல்ல கதையம்சங்கள் கொண்ட, படிப்பவரைத் தன்வயப்படுத்தும் இந்த அருமையான நாவலை, வசந்தம் - தினகரன் ஞாயிறு மலர் - தொடர்கதையாக வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவல்.
Release date
Ebook: 2 February 2022
அத்தியாயத்திற்கு அத்தியாயம் விருவிருப்பு - எதிர்பார்ப்பு நம் நெஞ்சை அள்ளுகிறது. இடையிடையே புரியும்படியான உலகியல் தத்துவங்கள், பாயசத்தில் காணும் முந்திரிப் பருப்புகளாகக் காட்சி தருகின்றன.
இயல்பான நடையோட்டத்துடன் கூடிய இக் குடும்ப நாவலில், பெண்கள் அவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படுகின்ற துன்பங்களையும் சோதனைகளையும் கண்டு துவண்டு விடாமல் அவைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் அவர்கள் முன்னேறும் போது, அவர்களைத் தெய்வமாக வணங்கத் தோன்றுகிறது.
எத்தனை முறை படித்தாலும் சலிப்புத் தட்டாத படியும், படிக்கப் படிக்க இன்பம் தருமாறும், சமுதாயச் சிக்கல்களையும் பல்வேறுபட்ட மனிதர்களுடைய குணாதிசயங்களையும் கற்பனைத் திறன் கொண்டு, உவமைகளையும் உருவகங்களையும் தந்து, நகைச்சுவை ததும்ப, இந்நூலாசிரியர் எழுதியிருப்பது பாராட்டுக்குரிய செய்தியாகும்.
கதை சொல்லும் உத்தியும் பாங்கும் அருமை. படிக்கத் தொடங்கினால் முடித்துவிட்டுத்தான் வைக்கத்தோன்றும் வகையில், ஆவலைத் தூண்டில் போட்டு இழுக்கின்றார் ஆசிரியர்.
நூலின் இறுதியில் திருப்புமுனைகளை மிக அற்புதமாகத் தந்து, வெற்றியும், மகிழ்ச்சியும் ஒருசேர அமையும்படி, நாவலை முடித்துள்ள ஆசிரியரின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும், படித்து முடித்தபின் நம் கண்முன் நிற்கும் ஆற்றல் படைத்து விளங்குகிறது.
விரச உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட பரிசளிப்புக்கு ஏற்ற, கல்லூரிகளில் பாடமாக வைக்கத்தக்க, திரைப்படமாக்குவதற்கு ஏற்ற நல்ல கதையம்சங்கள் கொண்ட, படிப்பவரைத் தன்வயப்படுத்தும் இந்த அருமையான நாவலை, வசந்தம் - தினகரன் ஞாயிறு மலர் - தொடர்கதையாக வெளிவந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவல்.
Release date
Ebook: 2 February 2022
Step into an infinite world of stories
Overall rating based on 1 ratings
Download the app to join the conversation and add reviews.
English
India