Step into an infinite world of stories
Short stories
எண்ணமும் எழுத்தும்
இலக்கிய உலகில் பல எழுத்துக்கள் வணிக மயமாக்கப்பட்டு சீரழிந்து கிடக்கையில் நமது எழுத்துக்களும் கவனம் பெறுமா என்ற ஏக்கம் ஒருபுறம். மறுபுறம் ஆயிரம் பணிச் சுமை, குடும்பச் சுமை என்று பல இருந்தாலும் எழுதியே ஆகவேண்டும் என்கிற எண்ணம் மேலும் மேலும் வலுப்பெறுகிறது. ஏனெனில் எழுதுவது ஒரு சமூகப் பொறுப்பு.
மூன்று தொகுப்புகளுக்குப் பிறகு இது நான்காவது தொகுப்பு சிநேகிதன். ஆச்சரியமாகத்தான் இருக்கிறது! எப்போது எழுதினோம், எப்படி எழுதினோம் என்ற பிரமிப்பும் கூடவே ஏற்படுகிறது.
அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகளையும் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிற அவலங்களுமே ஆங்காங்கே என் கதைகளில் பிரதிபலித்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வாசகத்தளமும், நிறைந்த விமர்சனங்களையும் கொண்டு என் கதைகள் இன்றளவும் தொடர்கின்றன.
எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் கதைகளில் வந்து போனாலும் ‘எங்க சனங்களின் கதை’ இருளிலிருந்து ஒளிக்கு ஏங்குவது; அடிமைத்தனத்திலிருந்து விலங்கொடித்து விடுதலை பெறத் துடிப்பதாகும்.
அடிபட்டு வீழ்ந்து நொந்துபோன எங்க சனங்கள் இந்த சமூக அமைப்பை எதிர்த்து எனது எல்லா கதைகளிலும் தொடர்ந்து வருவார்கள், பேசுவார்கள், திமிறி எழுவார்கள்!
சாகித்திய அகாடமி (சென்னை) யில் கதை வாசிக்கப்பட்டும், தொகுப்பில் சேர்க்கப்பட்டும், மத்திய சாகித்ய அகாடமி (புதுடெல்லியில் கதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும், ‘இன்தாம்’ இன்டர்நெட்வரை கதை வெளிவந்திருப்பதும் சிறு சந்தோசம் தருகிற செய்தி.
எனது கதைகளை வெளியிட்ட தாமரை, செம்மலர், இந்தியா டுடே, தினமணி கதிர்... உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளுக்கும் விமர்சனங்களினால் ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இனி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
- விழி. பா. இதயவேந்தன்
Release date
Ebook: 23 December 2019
English
India