Step into an infinite world of stories
இந்த நாவல் அஷ்டமா சித்தி வரிசையில் இறுதியாக எழுதியது. 'அணிமா, மகிமா, இலஹிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வம், ஈசாத்வம்' என்று எட்டு சக்திகளை நமது ஆன்மிக சாதகர்களும் யோகிகளும் அஷ்டமா சித்திகளாக குறிப்பிடுகிறார்கள்.
எட்டு சித்திகளில் எட்டாவதான ஈசத்துவத்தை அடைந்தவர்கள் எந்த நிலையிலும் மீதமுள்ள ஏழு சித்திகளை பயன்படுத்துவதில்லை. அதற்கு அவர்கள் வாழ்வில் அவசியங்களும் இல்லாமல் போய் விடுவதே உண்மை.
கதையின் நாயகன் ஈசத்வத்தை பிறப்பிலேயே அடைந்துவிட்ட ஒருவன். அதற்கேற்பவே அவன் செயல்பாடுகளும் அமைந்துவிட்டன. மறைமுகமாக திருவண்ணாமலை பற்றி அறிந்து கொள்ள முயல்பவர்களுக்கும் இந்நூல் சிறிதளவு துணை செய்யலாம்.
அஷ்டமாசித்து பற்றி அறியாதவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக இந்த நாவல்கள் அமைந்ததாக பலர் குறிப்பிட்டனர்.
Release date
Ebook: 5 February 2020
English
India