Lyric Poetry & Drama
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் பெங்களூருவில் என் தமக்கை மாலதியின் வீட்டில் இருந்தபோது ஒரு மத்தியானப் பொழுதில் நேர்ந்த அனுபவத்தின் விளைவே "மனோன்மணி மாலை." அந்த அனுபவத்திற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1987ல்தான் இது 100 வெண்பாக்கள் கொண்ட நூலாய் விளைந்தது. 2005ல் நான் விசாகப்பட்டினத்தில், ஊழியத்திற்குக் கும்பிடு போட்ட பிறகு என் இனிய நண்பர் சுவாமி சிவயோகானந்தா (அன்று அவர் பிரம்மச்சாரி ஶ்ரீநிவாச சைதன்யா) அவர்களின் அழைப்பின் பெயரில் மதுரைக்குச் சென்றேன். அவர்தான் என்னுடைய ஐந்து நூல்களை ஒரே சமயத்தில் பதிப்பித்து, மீனாட்சி கோயில் ஆடி வீதியில் அமைந்த திருவள்ளுவர் கழகத்தில் வெளியிட்டார். அதுதான் இன்று மின்னூலாக மிளிர்கிறது. தமிழை ரசிப்பவர்களுக்கும், தன்னை அறியத் தலைப்பட்டிருப்பவர்களுக்கும் இந்த வெண்பா மலர்கள் சுகம் தரும்.
Release date
Ebook: 10 April 2024