Step into an infinite world of stories
Fiction
இணைய தளத்தில் வெளியாகும் என்னுடைய 7-வது சிறுகதைத் தொகுப்பு “பந்தயப் புறாக்கள்”. குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, நட்புக் கதை, என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் “பந்தயப் புறாக்கள்” என்னும் குடும்பக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், குடும்பக் கதையிலும் சஸ்பென்ஸை கதையின் கடைசி நொடி வரையிலும் கொண்டு செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் கதை என்பதாலேயே.
ஒரு சிறுகதைத் தொகுப்பில் இடம் பெறும் கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு கருத்தோ, படிப்பினையோ எடுத்துரைக்கப்படுமானால் அத்தொகுப்பு முழுமையான வரவேற்பை நிச்சயம் பெறும். அதே நேரம் அவ்வாறு எடுத்துரைக்கப்படும் கருத்து பூடகமாகவோ, கடின வார்த்தைகள் மூலமாகவோ, எடுத்துரைக்கப்படும் போது அவை பாமர மக்களைச் சென்றடைவதில் சிறு தள்ளாட்டம் ஏற்படுவதுண்டு. அதை தவிர்க்கும் எண்ணத்திலேயே இத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் சாதாரண வழக்கு மொழியிலேயே புனையப்பட்டுள்ளன.
கேபிள்காரன், என்னும் ஒரு பாத்திரத்தை நாம் நம் அன்றாட வாழ்வில் அனுதினமும் சந்திக்கின்றோம். அவனை ஒரு எந்திரமாக மட்டும் பார்க்கும் சமுதாயத்திற்கு அவனுக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கின்றான், என்பதைக் கூறும் விதமாய் படைக்கப்பட்ட கதை “கேபிள்காரன்”. இதன் பின்புலத்தில் உள்ள ஒரு ரகசியம் என்ன்வென்றால், அது ஒரு நிஜக்கதை. அந்தப் பாத்திரம் ஒரு நிஜப் பாத்திரம். அதன் காரணமாகவே, அக்கதையில் அந்தப் பாத்திரத்தின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நிதானமாய் வாசியுங்கள். நிச்சயம் நெகிழ்வூட்டும்.
வணக்கம்.
இவண்,
முகில் தினகரன்
Release date
Ebook: 15 September 2020
English
India