Step into an infinite world of stories
Non-Fiction
பண்டரிபுரத்தில் விட்டலனை எழுந்தருளச் செய்த புண்டலீகன் கதை முதல், பூனைக்குட்டிக்காக குலத்தொழிலை தியாகம் செய்த ராகாகும்பர் வரை, நூலின் ஒவ்வொரு பக்கமும் பக்திப் பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடுகிறது. இத்தகைய மகான்கள் பிறந்த மகத்தான பூமியிலா நாம் வாழ்கிறோம்? பல இடங்களில், படிக்கப் படிக்க நெஞ்சு விம்முகிறது.
நூலின் மற்றொரு சிறப்பு மகாபக்தர்களின் அபங்கங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வழங்கி இருப்பது. பக்த நரஹரி, உத்தவரின் மறுபிறப்பான நாமதேவர், மராத்தி இலக்கியச் சிற்பிகளுள் ஒருவரான ஞானேஸ்வரர், இசையுலகின் பிரம்மா புரந்தரதாசர், சிவாஜியின் குருநாதர்கள் சமர்த்த ராமதாசர், துக்காராம், கனிகையர் குலத்துதித்த பக்த கணோபாத்ரா உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட மகான்களின் திவ்ய சரிதமும், அவர்களுடன் விட்டலன் நிகழ்த்திய திருவிளையாடல்களும் நிறைந்த நூல் இது. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அற்புதமான புத்தகம் இது.
Release date
Ebook: 28 March 2025
English
India