Step into an infinite world of stories
8 of 10
Non-Fiction
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
பட்டத்தரசி என்ற நூலில் வாசல், சோலையில் ஓர் நாள், கவிஞன் கவலை, ஆயிரம் பொன், அங்கங்கே, ஆரியத்தின் அச்சம், தோற்றான் வென்றான், தேய்ந்த கனவு, கூத்தாடி மீசை என்று ஒன்பது கவிதைக் கதைகளை சுரதா படைத்துள்ளார்,
© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368989020
Release date
Audiobook: 4 May 2023
English
India